எச்சரிக்கை: வாட்ஸ் அப் மூலம் சைபர் மோசடி அதிகரிப்பு

Viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜன.2 இணையவழி குற்றங்களுக்கு வாட்ஸ்-அப் சமூக வலைதளத்தை மோசடியாளர்கள் அதிகம் பயன்படுத்துவதாக ஒன்றிய உள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் 2023-2024 அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், வாட்ஸ்-அப் மூலம் இணைய மோசடி நடைபெற்றதாக 43,797 புகார்கள் பெறப்பட்டன. இதற்கு அடுத்தபடியாக, டெலிகிராம் செயலி (22,680), இன்ஸ்டாகிராம் செயலி (19,800) வழி யாக இணைய மோசடி நடைபெற்றதாக புகார்கள் பதிவாகியுள்ளன.

மேலும் இணையவழி குற்றங்களில் ஈடுபடும் மோசடியாளர்கள் கூகுள் சேவை தளங்களை அதிக அளவில் பயன்படுத்தி உள்ளனர். வெளிநாட்டிலி ருந்து செயல்படும் மோச டியாளர்களுக்கு கூகுள் விளம்பர தளம் மோசடியில் ஈடுபடுவதற்கு நல்லதொரு வாய்ப்பாக அமைந்து விடு கிறது.

‘பிக் பட்சரிங் மோசடி’ அல்லது ‘முதலீட்டு மோசடி’ என அழைக்கப்படும் இந்த மோசடி, ஒரு உலகளாவிய நிகழ்வு ஆகும். அத்துடன் பெரிய அளவிலான பண மோசடி மற்றும் இணைய அடிமைத்தனத்தை உள்ளடக்கியது. வேலை யில்லா இளைஞர்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள் மற்றும் பணம் தேவை உள்ள மக்கள்தான் இவர்களின் இலக்காக உள்ளனர். இதுபோன்றவர்கள்தான் இணையவழி மோசடியில் சிக்கி அதிக பணத்தை இழக்கின்றனர். சிலர் கடன் வாங்கியும் இந்த மோசடி மூலம் பணத்தை இழந்துள்ள னர்.
டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் செயலிகள் மற்றும் இணையவழி மோசடி செய்பவர்களின் ரகசிய தகவல் மற்றும் சமிக்ஞைகளை பரிமாறிக்கொள்வதற்காக இணையவழி குற்ற ஒருங்கி ணைப்பு மய்யமான I4C, கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனத்துடன் கூட்டு வைத்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *