2024இல் உலகில் நடந்த 10 பேரிடர் நிகழ்வுகளில் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு

Viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜன.1 2024-ஆம் ஆண்டில் உலகில் நடந்த 10 பேரிடர் நிகழ்வுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர்.

பேரழிவு
இதுதொடர்பாக அமெரிக் காவைச் சேர்ந்த கிறிஸ்டியன் எய்ட் என்ற அரசு சாரா அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பருவநிலை மாற்றங்களால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பேரழிவுகள் ஏற்படுகின்றன. பேரழிவுகள் காரணமாக ஒரு நாட்டில் ஏற்படும் பொருளாதார தாக்கம், மனித உயிரிழப்புகள் குறித்த தகவல்களை கிறிஸ்டியன் எய்ட் அமைப்பு சேகரித்து வருகிறது.
2024-ஆம் ஆண்டில் மிகப்பெரிய பேரழிவுகள் ஏற்படவில்லை என்றா லும், வட அமெரிக்காவில் 4, அய்ரோப்பிய நாடுகளில் 3 பேரழிவு நிகழ்வுகள் நடந்தன. மீதமுள்ள 3 பேரழிவுச் நிகழ்வுகள் சீனா, பிரேசில், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்டன.

2 ஆயிரம் பேர் உயிரிழப்பு
இந்த நிகழ்வுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சுமார் 288 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. இந்த மதிப்பீடுகளில் பெரும்பாலானவை காப்பீடு செய்யப்பட்ட இழப்புகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. அதேநேரத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரியவந்தாலும், உயிரிழந்த மக்களின் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கிறிஸ்டியன் எய்ட் வெளி யிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டின் கேரள மாநிலம் வய நாட்டில் ஏற்பட்ட பேரழிவுச் நிகழ்வு இடம்பெறவில்லை. கடந்த ஜூலையில் நடந்த இந்த பேரழிவுச் சம்பவத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கோடிக்கணக்கான ரூபாய் இழப்பும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *