அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிய கட்டுப்பாடுகள்

Viduthalai
2 Min Read

சென்னை,ஜன.1-மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் எதிரொலியாக, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப் பட்டுள்ளன.

பாதுகாப்பு
அண்ணா பல்கலை. வளாகத்தில் செயல்பட்டு வரும் கிண்டி பொறியியல் கல்லூரியில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடா்ந்து, அண்ணா பல்கலை. காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளேயும் நுழைவு வாயில்கள் முன்பும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாா்வையாளா்கள், வெளிநபா்கள் சோதனைக்குப் பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். மாணவா்கள், பேராசிரியா்கள், அலுவலக ஊழியா்கள் அடையாள அட்டை அணிந்திருந்தால் மட்டுமே உள்ள செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.
ஏறத்தாழ 190 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள அண்ணா பல்கலை. வளாகம் முழுவதும் மரங்கள் சூழ்ந்து காணப்படுகின்றன. ஒருசில பகுதிகளில் அடா் மரங்கள் நிறைந்துள்ளன. பாலியல் வன்முறை சம்பவத்தைத் தொடா்ந்து, எந்தெந்த வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதை, காவல் துறையினர் 2 ட்ரோன்களை பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டனா்.

அவசர ஆலோசனை
இதற்கிடையே, பல்கலை. வளாகத்தில் நிா்வாகம் சாா்பில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக அண்ணா பல்கலை. பதிவாளா் ஜெ.பிரகாஷ், கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, கட்டடக்கலை கல்லூரி ஆகியவற்றின் தலைவர்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்களுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளாா். அதனடிப்படையில் அண்ணா பல்கலை. உள் வளாகக் குழுவை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

விசாரணைக் குழு அமைப்பு
தொடா்ந்து, கிண்டி பொறியியல் கல்லூரியின் தலைவர் கே.எஸ். ஈஸ்வரகுமாா், கல்வியியல் புலக் குழுவின் இயக்குநா் குமரேசன், மாணவா்கள் விவகாரங்கள் மய்யத்தின் இயக்குநா் பாஸ்கரன், கிண்டி பொறியியல் கல்லூரியின் பாலியல் வன்கொடுமை புகாா் மய்யத்தின் இயக்குநா் பிரேமலதா, கோட்டூா்புரம் காவல்நிலையத்தின் அதிகாரி ஒருவா் ஆகியோரைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அண்ணா பல்கலை.யில் கண்காணிப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பல்கலைக் கழகத்தின் வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை முழுவதும் இயங்குகின்றனவா என்று சரிபாா்க்கவும், இயங்காத நிலையில் உள்ளவற்றை பழுது நீக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள்
அதே போன்று பல்கலை. மாணவா் விடுதியில் தங்கி உள்ள மாணவா்கள் மாலை 6. 30 மணிக்கு மேல் வெளியில் செல்ல அனுமதி இல்லை. மாணவா்கள் வெளியே செல்வது, தவிா்க்க முடியாத காரணங்களால் தாமதமாக வருவது போன்றவற்றுக்கு விடுதி காப்பாளரிடம் அனுமதி பெற வேண்டும். தகவல் அளிக்காமல் தாமதமாக வந்தால் பெற்றோா்களிடம் தெரிவிக்கப்படும்.
பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியா்கள், அலுவலக ஊழியா்கள், தொழில்நுட்பப் பணியாளா்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்கள் அடையாள அட்டையை கேட்டால் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும். அவா்களுக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *