கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

1.1.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூர் வன்முறை தலைநகராக இருக்கிறது, ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிக்கை.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* உச்சநீதிமன்றம் நியமித்த குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் சங்கங்கள் முடிவு.
* பாஜக அரசுகளின் மனுஸ்மிருதி ஆட்சியில் ஏழைகள் தலித் மக்கள் துயரப்படுகின்றனர்: மல்லிகார்ஜூன கார்கே சாடல்
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கோவில்களுக்குள் நுழையும் முன் மேல் ஆடையை அகற்றும் ஆண்களின் வழக்கம் தீமை, மாற வேண்டிய நேரம், என்கிறார் சமூக சீர்திருத்தவாதி சிறீநாராயண குருவால் நிறுவப்பட்ட சிவகிரி மடத்தின் தலைவர் சுவாமி சச்சிதானந்தா. இது சமூக புரட்சியாக மாறும், முதலமைச்சர் பினராயி விஜயன் ஆதரவு.
* மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வரும் வன்முறைகளுக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டார் முதலமைச்சர் பிரேன் சிங். பிரதமர் மோடி எப்போது வருத்தம் தெரிவிப்பார் என காங்கிரஸ் கேள்வி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
*அதானி குழுமத்துடன் விலை நிர்ணயம் சிக்கல்களை காரணம் காட்டி ஸ்மார்ட் மீட்டர் டெண்டர்களை தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் லிமிடெட் (TNPDCL), ரத்து செய்தது
தி டெலிகிராப்:
* பாதி நேரம் படிப்பு; மீதி நேரம் தொழிற் பயிற்சி, திறன் திட்டம் என்ற யு.ஜி.சி. பரிந்துரைக்கு, ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு. மாணவர்களின் கல்வித் திறனை பாதிக்கும் என அச்சம்.

.- குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *