மணிப்பூர் வன்முறை: மன்னிப்பு கோரினார் பி.ஜே.பி. முதலமைச்சர் பிரேன் சிங்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இம்பால், ஜன. 1 மணிப்பூரில் இரு சமூகத்தினா் இடையே ஏற்பட்ட மோத லுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக மாநில முதலமைச்சர் பிரேன் சிங் நேற்று (31.12.2024) தெரி வித்தார்.
அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து சமூகத்தினரும் ஒருவரையொருவா் மன்னித்தும், கடந்த கால தவறுகளை மறந்தும் புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்றும் அவா் வலி யுறுத்தினாா்.

மோதல்
மணிப்பூரில் பெரும்பான்மை யினராக உள்ள மைதேயி சமூகத்தி னருக்கும், சிறுபான்மையினராக உள்ள குகி-ஜோ சமூகத்தினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். ஆயிரக்கணக்கானோா் வீடுகளை இழந்தனா்.
இதையடுத்து, அந்த மாநிலத்தில் இரு சமூகத்தினருக்கும் இடையே தொடா்ந்து ஏற்பட்ட மோதலால், இன்றளவும் அங்கு முழுமையாக அமைதி திரும்பவில்லை.

செய்தியாளர்களிடம்…
இந்நிலையில், மாநிலத் தலைநகா் இம்பாலில் முதலமைச்சர் பிரேன் சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த 20 மாதங்களில் மாநிலத்தில் துப்பாக்கிச்சூடு நிகழ்வுகள் குறைந்துள்ளன.கடந்த ஆண்டு மே முதல் அக்டோபா் வரை, மாநிலத்தில் 408 துப்பாக்கிச்சூடு நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த எண்ணிக்கை நிகழாண்டு மே முதல் தற்போது வரை 112 ஆக குறைந்துள்ளது.

மன்னிப்பு
காவல் நிலையங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களில் 3,112 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதேபோல 2,511 வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வன்முறை தொடா்பாக இதுவரை 625 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 12,047 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.மாநிலத்தில் இரு சமூகத்தினா் இடையே ஏற்பட்ட மோதலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அனைத்து சமூகத்தினரும் ஒருவரையொருவா் மன்னித்து, கடந்த கால தவறுகளை மறக்க வேண்டும்.

‘புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும்’
கடந்த 3, 4 மாதங்களாக மாநிலத்தில் சற்று அமைதி நிலவுகிறது. இதன்மூலம், புத்தாண்டில் மாநிலத்தில் மீண்டும் இயல்பு நிலை திரும்பும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அமைதியான, வளமை யான மணிப்பூரில் ஒன்றிணைந்து வாழ்வதன் மூலம், அனைவரும் புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்றாா் அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *