தமிழ்நாட்டில் ஆறு பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர் இல்லை ஆளுநர் தன் வரம்புக்கு உள்பட்டு செயல்பட வேண்டும்

Viduthalai
1 Min Read

ப.சிதம்பரம் பேட்டி

காரைக்குடி, டிச.31 ”சென்னை அண்ணா பல்கலை, நிகழ்விற்கு துணை வேந்தர் இல்லாதது தான் காரணம்,” என்று ஒன்றிய மேனாள் அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி., தெரிவித்தார்.
காரைக்குடியில் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவை புதிய பொரு ளாதார பாதையில் அழைத்துச் சென்றவர் மறைந்த மேனாள் பிரதமர் மன்மோகன் சிங். அவர் பிரதமராக இருந்த போது 24 முதல் 27 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு மேலே வந்துள்ளனர்.
அய்ம்பது விழுக்காடு பின் தங்கிய மக்களுக்கு அரசியல் சாசனத்தில் இடஒதுக்கீடு செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உள் ஒதுக்கீடு என்பது அந்தந்த மாநிலங்களின் சூழ்நிலைகளை பொறுத்தது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அரசியல் சாசனத்திற்கு முரணானது.

துணைவேந்தர்
சென்னை அண்ணா பல் கலை நிகழ்வை கண்டிக்கிறேன். இதற்கு காரணம் அண்ணா பல்கலை. உட்பட 6 பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்கள் இல்லை. இது வருத்தமளிக்கிறது. தமிழ்நாடு பா.ஜ., தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டது இங்கிலாந்து கற்றுக் கொடுத்த பாடமா என தெரியவில்லை. பொங்கல் பரிசு தொகை வழங்காதது தேர்தலை பாதிக்காது. ஒரு விஷயத்தால் தேர்தலில் வெற்றி, தோல்வி என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி எல்லா மாநிலத்திலும் அதிகமான குற்றங்கள் நடக்கிறது. இதனை தடுப்பது தண்டிப்பது அரசின் பொறுப்பு.

ஜி.எஸ்.டி.,
அரசின் பொறுப்புகளை தட்டிக் கழிப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
உலகத்தில் விந்தையான ஜி.எஸ்.டி., இந்தியாவில் தான் உள்ளது. ஜி.எஸ்.டி., சட்டமே தவறு. அதை அமல்படுத்தியதும் தவறு. இந்த வரி தொடர்பாக அமெரிக்கா கூறிய கருத்தை நான் ஏற்கவில்லை. அந்தந்த நாட்டு வரியை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். வெளிநாடுகள் தீர்மானிக்க முடியாது. இந்தியர்கள் மற்ற ஆசிய அறிவாளிகள் இல்லாமல் அமெரிக்க பொருளாதாரம் நடக்காது. அவர்களுக்கு தேவை என்றால் விசா தருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *