புதுடில்லி, டிச.27 முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் நேற்று (26.12.2024) இரவு 10 மணியளவில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார்.
டாக்டர் மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தி யாவிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்னாரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அன்னாரது இறுதி நிகழ்வு நாளை (28.12.2024) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த நிலையில், மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரி விக்கும் விதமாக 7 நாள்கள் அரசு தரப்பில் துக்கம் கடைப்பிடிக்கப் படுகிறது. இன்று (27.12.2024) திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப் படுகின்றன.
மேலும், காலை 11 மணிக்கு ஒன்றிய அமைச்சரவை கூடி இரங்கல் கூட்டமும் நடைபெறும். அன்னாரது இறுதிநிகழ்வு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், காங்கிரஸ் தொடக்க நாள் விழா உள்பட அக் கட்சி சாா்பில் அடுத்த 7 நாள்களுக்கு நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படு வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.