மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு: 7 நாள்கள் அரசு துக்கம் கடைப்பிடிப்பு

1 Min Read

புதுடில்லி, டிச.27 முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் நேற்று (26.12.2024) இரவு 10 மணியளவில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார்.
டாக்டர் மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தி யாவிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்னாரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அன்னாரது இறுதி நிகழ்வு நாளை (28.12.2024) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த நிலையில், மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரி விக்கும் விதமாக 7 நாள்கள் அரசு தரப்பில் துக்கம் கடைப்பிடிக்கப் படுகிறது. இன்று (27.12.2024) திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப் படுகின்றன.
மேலும், காலை 11 மணிக்கு ஒன்றிய அமைச்சரவை கூடி இரங்கல் கூட்டமும் நடைபெறும். அன்னாரது இறுதிநிகழ்வு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், காங்கிரஸ் தொடக்க நாள் விழா உள்பட அக் கட்சி சாா்பில் அடுத்த 7 நாள்களுக்கு நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படு வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *