11 ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு

1 Min Read

அரசியல்

11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்தடைந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை மலேசிய திராவிடர் கழகத் தேசியத் துணைத் தலைவர் சா.பாரதி, பொருளாளர் கு.கிருஷ்ணன், தேசிய உதவித் தலைவர் வீ.இளங்கோ உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். உடன் பெரியார் பன்னாட்டமைப்பு (மலேசியா கிளை) தலைவர்  மு.கோவிந்தசாமி, இயக்குநர் கே.ஆர்.ஆர்.அன்பழகன் ஆகியோர். மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் மதியுரைஞர் ‘கொள்கைச்சுடர்’ ரெ.சு.முத்தையா, தேசியத் தலைவர் நாக பஞ்சு ஏ.எம்.என்,  இளைஞரணித் தலைவர் த.நெ.நெடுஞ்சுடர், மகளிர் பிரிவு தமயந்தி, இதழாளர் நக்கீரன் சுப்பிரமணியம் ஆகியோர் சால்வை அணிவித்தும், தந்தை பெரியார் 144 ஆம் ஆண்டு பிறந்தநாள் சமூகநீதி நாள் மலர், பெரியார் கையொப்பச் சுவடி ஆகியவற்றை வழங்கியும் வரவேற்றனர். உடன்: திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்..

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *