விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

1 Min Read

விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி அறிவிப்பின்படி முதல்கட்டமாக, 84 விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின்கீழ், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிக் கல்வி, தொழில், எரிசக்தி, கூட்டுறவு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல், நெடுஞ்சாலைத் துறைகள் என 14 அரசுத் துறைகளில் பணிவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இளநிலை உதவியாளா், உதவியாளா், இளநிலை வரைவு அலுவலா், கூட்டுறவு சங்கங்களில் இளநிலை மற்றும் முதுநிலை ஆய்வாளா் போன்ற பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவுகளை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்வில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *