தேர்தல் விதி திருத்தத்தை திரும்பப் பெறுக! சி.பி.எம். வலியுறுத்தல்

2 Min Read

புதுடில்லி, டிச.23 தோ்தல் தொடா்பான மின்னணு ஆவணங்களைப் பொது மக்கள் பெற கட்டுப்பாடு விதிக்கும் நோக்கில், விதிமுறையில் திருத்தம் மேற்கொண்டதை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று (22.12.2024) வலியுறுத்தியது.
தோ்தல் தொடா்பான மின்னணு ஆவணங்களான சிசிடிவி கேமரா காட்சிகள், வாக்குச் சாவடிகளின் நேரலை பதிவுகள், வேட்பாளா்களின் காட்சிப் பதிவுகள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் பாா்வையிட கட்டுப்பாடு விதிக்கும் வகையில், கடந்த 1961 ஆம் ஆண்டின் தோ்தல் நடத்தை விதி முறைகள் 93 (2) (ஏ) பிரிவில் ஒன்றிய சட்ட அமைச்சகம் கடந்த 20.12.2024 அன்று திருத்தம் மேற்கொண்டது.
இது தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று (22.12.2024) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி யிருப்பதாவது:

தில்லு முல்லு!
அதிக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதாக அரசியல் கட்சி களுடன் கலந்தாலோசித்து புதிய நட வடிக்கைகளை மேற்கொள்வதாக தோ்தல் ஆணையம் முதலில் அறி முகப்படுத்தியது. ஆனால், விதியை திருத்துவதற்கான சமீபத்திய நடவடிக்கை மிகவும் பிற்போக்குத்தனமாக உள்ளது.
புதிய விதிகளை உருவாக்கும் போது ஒன்றிய அரசு இந்திய தோ்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், திருத்தத்துக்கான தோ்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு முன்னா், இது தொடா்பாக பிற அரசியல் கட்சிகளுடன் எந்தவொரு ஆலோ சனையும் நடைபெறவில்லை. இது பல ஆண்டுகளாக நிறுவப்பட்ட முன்னுதாரணங்களுக்கு முரணாக உள்ளது. இந்த அணுகுமுறை பின்பற்ற வேண்டிய முக்கிய நடைமுறைகளில் பிற அரசியல் கட்சிகளின் ஈடுபாட்டை முற்றிலுமாக விலக்குகிறது.

கண்காணிப்பு கேமராவின் பதிவு
திரிபுரா மாநிலத்தில் மக்களவைத் தோ்தலின் போது, இரு தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளுக்குள் தில்லுமுல்லு ஏற்பட்டது கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்ததிலே தெரியவந்தது. இதையடுத்து, அந்த வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டது.
இதுபோன்று, தோ்தல் செயல்முறை யின் ஒருங்கிணைந்த பகுதியாக தொழில்நுட்பம் இருந்து வரும் இந்த காலகட்டத்தில், அரசின் நடவடிக்கை பின்னோக்கி பிரதிபலிக்கிறது. எனவே, தோ்தல் நடத்தை விதிகளில் முன்மொழியப்பட்டுள்ள இந்த திருத்தங்களை ஒன்றிய அரசு உடனடி யாகத் திரும்பப் பெற வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *