இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த மூன்று அமெரிக்க நிறுவனங்களுக்கு ரூ.1,600 கோடி அபராதம்

viduthalai
2 Min Read

புதுடில்லி, டிச.22 ரயில்வே உள்ளிட்ட 3 இந்திய பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக 3 அமெரிக்க நிறுவனங்கள் சிக்கியுள்ளன. இது தொடர்பான வழக்குகளில் இருந்து தப்பிக்க அந்த நிறுவனங்கள் ரூ.1,600 கோடி அபராதம் செலுத்தியுள்ளன.
அமெரிக்காவில் உள்ள சட்டங்களின்படி அங்குள்ள நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் பெறுவதற்கு லஞ்சம் கொடுப்பது குற்றமாகும். இதற்காக அந்நாட்டின் நீதித்துறையும் பங்குச் சந்தை ஆணையமும் வழக்குகள் தொடர முடியும்.

இந்நிலையில் இந்தியன் ரயில்வேஸ், பாதுகாப்பு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்), பெட்ரோகெமிக்கல் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (அய்ஓசி) ஆகிய 3 இந்திய பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தங்கள் பெறுவதற்காக இவற்றின் அதிகாரிகளுக்கு 3 அமெரிக்க நிறுவனங்கள் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்திருப்பதை அமெரிக்க நீதித்துறையும் பங்குச் சந்தை ஆணையமும் கண்டுபிடித்துள்ளன. விண்வெளி நிறுவனமான மூக் இன்க், லாரி எலிசன் தலைமையிலான தொழில்நுட்பம் மற்றும் தீர்வுகளுக்கான ஆரக்கிள் நிறுவனம், ரசாயன உற்பத்தி நிறுவனமான அல்பமார்லே கார்ப்பரேஷன் ஆகிய 3 அமெரிக்க நிறுவனங்கள் இவ்வாறு லஞ்சம் கொடுத்துள்ளன. இந்நிலையில் இது தொடர்பான வழக்குகள் மற்றும் தண்டனையில் இருந்து தப்பிக்க இந்த 3 நிறுவனங்களும் 20 கோடி டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 1,600 கோடி) அமெரிக்க கருவூலத் துறைக்கு அபராதம் செலுத்தியுள்ளன. இத்தகவலை அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

புத்தாக்கமான மருத்துவ தொழில் நுட்பத்தில்
70 வயதான பெண்ணின் பித்தப்பையில் இருந்து 195 கற்கள் அகற்றப்பட்டது!

சென்னை, டிச.22 எளிதில் அணுகக்கூடிய மற்றும் தரமான சிகிச்சையை வழங்குவதில் முன்னணி மருத்துவமனையாக விளங்கும் பி வெல் மருத்துவமனை, புதுச்சேரியில் 70 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியையின் பித்தப்பையில் இருந்து 195 கற்களை வெற்றிகரமாக அகற்றியதன் மூலம் முக்கிய மருத்துவ சாதனையை எட்டியுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்த வயிற்று வலி மற்றும் குமட்டல் உள்ளிட்ட பிரச்சனைகளுடன், ஒரு பெண்மணி புதுச்சேரி பி வெல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தார். பரிசோதனைக்கு பின் ERCP முறையில் ஸ்டெண்ட் பொருத்துதல் மற்றும் லாபரோஸ்கோப்பிக் கொலிசிஸ்டெக்டமி மூலம் பித்தப்பையில் இருந்து கற்களை அகற்றுதல் ஆகியவை தீர்மானிக்கப்பட்டு நவீன செயல்முறைகளை கொண்டு சிறப்பான சிகிச்சை தரப்பட்டது.

இந்த சிக்கலான சிகிச்சையை மிக நுணுக்கமாக நடத்திய மருத்துவர் தீபக் ரவி (லாபரோஸ்கோப்பிக் அறுவைச் சிகிச்சை நிபுணர்) தலைமையிலான திறமையான பி வெல் மருத்துவமனை மருத்துவக் குழுவுடன் வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளது.
சிக்கலான அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ளும் திறமையில் புகழ்பெற்ற, பி வெல் மருத்துவமனை குறைந்த பாதிப்புள்ள அறுவை சிகிச்சை துறையில் புதிய நிலைகளை நிறுவி வருகிறது. இந்த வியத்தகு நிகழ்வில், மருத்துவ குழுவிலுள்ள மருத்துவர் விஜயா பாலகண்டன், மருத்துவர் ராம்குமார் மற்றும் மருத்துவக் குழுவின் ஒட்டுமொத்த சேவை மற்றும் ஆதரவுக்கு நோயாளி பெரும் பாராட்டுகளை தெரிவித்தார்.

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *