சிறையில் இருக்கும் ஆன்மீகப் பேச்சாளர் சிறீரங்கம் ரங்கராஜன் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

viduthalai
1 Min Read

சென்னை, டிச.21- சிறிரங்கங்கத்தைச் சேர்ந்த ஆன்மிக பேச்சாளர் ரங்கராஜன் மீது காவல் துறையினர் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.

திருச்சி சிறிரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். இவர் அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றில் காட்சிப் பதிவு ஒன்றை வெளி யிட்டிருந்தார். அதில், சிறீபெரும்புதூர் ஜீயர் குறித்து விமர்சித்ததாக கூறப்படுகிறது.

புகார்

இதையடுத்து, ‘உண்மைக்கு புறம்பாக தன்னைப் பற்றி அவதூறாக திரித்து புனையப்பட்ட உரை யாடலை சமூக வலை தளத்தில் பதிவிட்டு பொய்யான அவதூறு கருத்துகளை பதிவிட்ட சிறிரங்கம் ரங்கராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடம் சிறிபெரும்புதூர் ஜீயர் தரப்பில் புகார் தெரிவிக்கப் பட்டது.

இதையடுத்து, சென்னை மத்திய குற்றப் பிரிவில் உள்ள சைபர் க்ரைம் காவல் துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து சிறிரங்கம் ரங்கராஜனை கைது செய்து சிறையி்ல் அடைத்தனர்.

இதுஒருபுறம் இருக்க நீதிமன்றத்தை விமர்சித்து ரங்கராஜன் வேறொரு காட்சிப் பதிவை வெளியிட்டு இருந்ததாகவும், அதற்கு சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்குரைஞர் ஒருவர் சமூக வலைதளம் வழியாகவே சில கருத்துக்களை பதிலாக அளித்ததாகவும், இந்த கருத்து குறித்து வலைத் தளத்தில் ரங்கராஜன் கடுமையாக ஒரு கருத்தை தெரிவித்ததாகவும் கூறப் படுகிறது.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் வழக் குரைஞர் இதுபற்றி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
அதன்படி, சிறீரங்கம் ரங்கராஜன் மீது காவல் துறையினர் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *