இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அம்பேத்கர் குறித்து தவறாக பேசியதற்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும், எதிர்க்கட்சிகள் கோரிக்கை.
*ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைக்கப் பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் பிரியங்கா காந்தி, திமுகவின் செல்வகணபதி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். மக்களவையில் இருந்து 21 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் இருந்து 10 உறுப்பினர்களும் குழுவில் உள்ளனர்.
* டிசம்பர் 8 அன்று விஸ்வ ஹிந்து பரிஷத் நிகழ்ச்சியில் முஸ்லிம்களை குறிவைத்து பேசிய நீதிபதி யாதவ், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் சலசலப்புக்கு வழிவகுத்ததை அடுத்து, தலைமை நீதிபதி கன்னா தலைமையிலான முதல் அய்ந்து நீதிபதிகள் அடங் கிய கொலீஜியம் அவரை அழைத்து விசாரித்தது. இந்த சந்திப்பு குறித்து, உச்ச நீதிமன்ற இதர நீதிபதிகளிடம் தலைமை நீதிபதி சஞ்சய் கன்னா தெரிவித்தார்.
தி டெலிகிராப்:
*’பாஜகவின் ஜாதிவெறி, தாழ்த்தப்பட்ட விரோத மனநிலையின் வெளிப்பாடு’: அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் கருத்துக்கு மம்தா காட்டம்.
.- குடந்தை கருணா