மறைவு

1 Min Read

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) 35 ஆண்டுகளாக எலக்ட்டிரிசியனாக பணியாற்றி வந்த எ.அந்தோணி (வயது 56 ) அவர்கள் நேற்று (17.12.2024) இரவு 11.30 மணியளவில் மறைவுற்றார். திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் வளர்ந்த அவ்வைமணி என்ற மனைவியும், இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், கூடுதல் பதிவாளர் மற்றும் பணியாளர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

– – – – –

மறைவு

கடலூர் பெரியார் படிப்பக நூலகர் பெரியார் பெருந்தொண்டர் தி. மாதவன் (வயது 67) உடல் நலக் குறைவு காரணமாக 17.12.2024 மாலை 3:50 மணிக்கு இயற்கை எய்தினார் என்பதை தெரிவிக்க வருந்துகிறோம் இறுதி நிகழ்வு 18.12.2024 மதியம் 1 மணிக்கு 15 மீனாட்சி நகர் ஆனைக்குப்பம் கடலூர் 1 அவர் இல்லத்தில் இருந்து மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு உடல் கொடை வழங்கப்பட்டது. முன்னதாக கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலைமையில் கழகத் தொண்டர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *