டங்ஸ்டன் சுரங்கம்: மலைமீது அமர்ந்து மக்கள் போராட்டத்தைத் தொடங்கினர்

1 Min Read

மேலூர், டிச.18- மேலூர் அருகே நேற்று (17.12.2024) இரவு கூடிய அரிட்டாபட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஒன்றிய அரசு ரத்து செய்யும் வரை, மலை மீது அமரும் தொடர் போராட்டத்தை திடீரென தொடங்கினர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி, நாயக்கர் பட்டியில் வேதாந்தா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்தன.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மலைமீது அமர்ந்து போராட்டம்

இதற்கிடையே பல்வேறு அரசியல் கட்சிகளும் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கப் பிரச்சினையில் மக்களுக்கு ஆதரவாக போராட்ட களத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று (17.12.2024) இரவு அரிட்டாபட்டியில் கூடிய கிராம மக்கள், அருகில் உள்ள மற்ற கிராமங்களில் வசிக்கும் மக்களுடன் இணைந்து டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யும் வரை தொடர் போராட்டம் நடத்துவது குறித்து, ஆலோசனை நடத்தினர்.

இதன் முடிவில், நாள்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மலை மீது அமர்ந்து போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்தனர்.
இதன்படி முதற்கட்டமாக பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைவரும் இணைந்து தங்கள் போராட்டத்தை நேற்றிரவு மலை மீது ஏறி அமர்ந்து நடத்தினர். இப்போராட்டம், சுரங்கத்திற்கான அனுமதி ரத்து செய்யப்படும் வரை தொடரும் என, கிராம மக்கள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *