வெள்ளம் மற்றும் வறட்சியால் பல மாவட்டங்கள் பாதிப்படையும் அய்.அய்.டி. ஆய்வறிக்கை

viduthalai
1 Min Read

பெங்களூரு, டிச. 16- பாட்னா, ஆலப்புழை மற்றும் கேந்திரபாரா உள்ளிட்ட 11 மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் வறட்சியால் பாதிப்புக்குள்ளாகும் ‘மிக அதிக’ அபாயத்தில் உள்ளன என்று இரண்டு அய்அய்டிக்களின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பெங்களூருவில் உள்ள அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மய்யத்துடன் (சிஎஸ்டிஇபி) இணைந்து குவாஹாட்டி அய்அய்டி மற்றும் மண்டி அய்அய்டி ஆகியவை காலநிலை மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டனா்.
‘இந்தியாவின் மாவட்ட அளவிலான காலநிலை பேரிடா் மதிப்பீடு:

அய்பிசிசி கட்டமைப்பைப் பயன்படுத்தி வெள்ளம் மற்றும் வறட்சி அபாயங்களை வரைபடமாக்குதல்’ என்று பெயரிடப்பட்ட இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் 51 மாவட்டங்கள் ‘மிக அதிக’ வெள்ள அபாயத்தையும், 118 மாவட்டங்கள் ‘அதிக’ ஆபத்தையும் எதிர்கொள்கின்றன.

அசாம், பீகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், ஒடிசா மற்றும் ஜம்மு-காஷ்மீா் ஆகியவை பாதிக்கக்கூடிய பகுதிகளாகும். பீகார், அசாம், ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் மகாராட்டிரத்தில் உள்ள 91 மாவட்டங்கள் ‘மிக அதிக’ வறட்சி அபாயத்துடனும், 188 மாவட்டங்கள் ‘அதிக’ வறட்சி அபாயத்துடனும் உள்ளன.

பாட்னா (பீகார்), ஆலப்புழை (கேரளம்) மற்றும் கேந்திரபாரா (ஒடிசா) உள்ளிட்ட 11 மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் வறட்சியால் பாதிப்புக்குள்ளாகும் ‘மிக அதிக’ அபாயத்தில் உள்ளன. இதனால், உடனடி தலையீடுகள் தேவைப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *