தெலங்கானாவில் ஜாதிவாரி ஆய்வு அறிக்கை விரைவில் வெளியாகும் : முதலமைச்சர் அறிவிப்பு

1 Min Read

அய்தராபாத், டிச.16- தெலங் கானாவில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு கடந்த மாதம் (நவ. 6) தொடங்கப்பட்டது. இந்த நிலையில், ஜாதிவாரிக் கணக் கெடுப்பு பணிகள் 98 சதவிகிதம் நிறைவுற்றுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் தெரிவித்துள்ளார்.

அய்தராபாத்தில் சமூக நிகழ்ச்சி யொன்றில் அவர் பேசியதாவது: “தெலங்கானாவில் சமுதாய நலப் பரிசோதனையாக இந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு அமையும்.

இதன்மூலம், திரட்டப்பட்டுள்ள தரவுகள் ஆளும் காங்கிரஸ் அரசால் பஞ்சாயத்து, சட்டப்பேரவை, மக்களவை தேர்தல்களில் குருமா சமூகத்தினரின் மக்கள்தொகைக்கேற்ப அவர்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகரிக்க வழிவகை செய்யும்” என்றார். மேலும், பட்டியலினப் பிரிவில்(எஸ்சி) உள்ள உள்பிரிவுகள் குறித்த விவகாரத்தில் அமைச்சர் என். உத்தம் குமார் தலைமையில் ஆய்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இதன் மூலம், மடிகா சமூகத்திற்கு சமூகநீதி கிடைக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார். அந்த சமூகத்தைச் சேர்ந்தோருக்கு மாநில அரசு நிறுவனங்களில் உயர் பொறுப்புகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *