பூதவராயன்பேட்டை, டிச.16 பூதவ ராயன்பேட்டை வேதவல்லி அம்மையார் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி 15.12.2024 அன்று காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை சிதம்பரம் கழக மாவட்ட தலைவர் பேராசிரியர் பூசி இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.
திமுக முன்னோடி அ.சாமி துரை, மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆண்டவர் செல்வம், மேகநாதன், வெற்றிவேல், தற்போதைய ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொழிலாளர் சீரமைப்பு இயக்கம் பொதுச்செயலாளர் கோகுலகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். அம்மையாரின் படத்தினை திறந்து வைத்து கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் நினைவேந்தல் உரையாற்றினார்.
அவர் தன் உரையில், மறைந்த அம்மையார் வேதவல்லி தன் மறைவுக்கு பின்னால் தமது கண்களை, கண் மருத்துவ மனைக்கும் சிதம்பரம் அண்ணா மலை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு உடற்கொடையும் அளித்து, செத்தும் கொடை கொடுத்தவராக ஆகி உள்ளார் என்றும், கட லூர் மாவட்டத்தில் அதிக உடற்கொடை கொடுத்தவர்கள் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களே என்றும், விழிக்கொடை, உடற்கொடை, உடல் உறுப்புகள் கொடை பற்றிய விழிப்புணர்வை திராவிடர் கழகம் பரப்புரையாகவே மக்கள் மத்தியில் செய்து வருகிறது என்றும் குறிப்பிட்டார்.
மண்ணுக்கும், நெருப்புக்கும் இரையாகும் கண்களை உடல் உறுப்புகளை மற்றவர்கள் பயன்பெறும்படி செய்வது தவறா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
திராவிடர் கழகத்தின் மாந்தநேய செயல்பாடுகளை பலரும் வரவேற்று உரையாற்றினார்கள். நிகழ்வில் திருவொற்றியூர் சேகர், தமிழரசி தாயார் படத்தை கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திர சேகரனும், தந்தையார் மாரிமுத்து படத்தை திமுக முன்னோடி கீரை வீரமணி ஆகியோர் திறந்து வைத்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எழில் கரோலின், தொழிலாளர் சீரமைப்பு இயக்க நிர்வாகி சிவப்பிரகாசம், தமிழ் மக்கள் உரிமை முன்னணி அமைப்பாளர் மதியவன், தோழர் செல்வி, தோழர் தெய்வமணி, கழகப் பேச்சாளர் யாழ்திலீபன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் நெடுமாறன், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பெரியார் செல்வம், கடலூர் கழக மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்ட அமைப்பாளர் மணிவேல், மாவட்ட இளை ஞரணி செயலாளர் பஞ்சநா தன், காட்டுமன்னை ஒன்றிய செயலாளர் முருகன், பெரியார் பெருந்தொண்டர்கள் பழனி யாண்டி, ஆசீர்வாதம், எழுத்தா ளர் அறிவழகன், சரியா இலக்கிய அமைப்பைச் சேர்ந்த போஸ்கோ, கழகப் பேச்சாளர் புலவர் ராவணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அரங்க தமிழொளி, செங்குட்டுவன் மற்றும் பலரும் நிகழ்வில்
பங்கேற்று சிறப்பித்தனர்
நிறைவாக, திருவொற்றியூர் மா.சேகர் நன்றி கூறினார்.
கூட்டத்தில் நினைவு உரை யாற்றிய, பங்கேற்ற முன்னணி யினருக்கு டாக்டர் அம்பேத்கர் பற்றிய நூலும், கைத்தறி ஆடையும் அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. கிராமம் முழுவதும் கழகக் கொடிகள் அனைவரையும் வரவேற்கும் முகத்தான் கட்டப்பட்டிருந்தது.