சரத் பவார் கட்சியை உடைக்க பா.ஜ.க. முயற்சி சஞ்சய் ரவுத்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, டிச.15- ‘சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவார்) கட்சியை உடைக்கும் வேலையை, அஜித் பவார் மற்றும் பிரஃபுல் படேல் ஆகியோரிடம் ஒப்படைத் துள்ளது பாஜக என்று சிவசேனா (உத்தவ்) கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் ரவுத் தெரிவித்தார்.

மகாராட்டிரத்தில் அண்மையில் நடந்த பேரவைத் தோ்தலில் பாஜக-ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா-அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.

இதையடுத்து, முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதலமைச்சர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் பதவியேற்றனா்.
இந்நிலையில், சரத் பவார் கட்சியை உடைக்க முயற்சி நடப்பதாக, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (உத்தவ்) கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

அஜித் பவார் தலைமை யிலான தேசியவாத காங்கிரசில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே உள்ளார்; அதேநேரம், சரத் பவார் அணியில் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனா்.

இதில் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களை தங்கள்வசம் இழுக்கும் நோக்குடன் துணை முதலமைச்சர் அஜித் பவாரும், தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவா் பிரஃபுல் படேலும் செயல்பட்டு வருவதாக சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவா் சஞ்சய் ரவுத் குற்றஞ்சாட்டினார்.

இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘பாஜக கூட்டணியில் ஒரு கட்சிக்கு 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால் ஒன்றிய அமைச்சரவையில் ஓரிடத்தை பெற முடியும்.

அதன்படி, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசுக்கு ஒன்றிய அமைச்சா் பதவி கிடைக்க வேண்டு மென்றால் இன்னும் 5 நாடாளுமன்ற உறுப் பினர்கள் தேவை.

எனவே, சரத் பவார் கட்சியை உடைத்து, 5 பேரை தங்கள்வசம் இழுத்தால், தேசியவாத காங்கிரசுக்கு ஒன்றிய அமைச்சரவையில் ஓரிடம் தருவதாக பாஜக கூறியுள்ளது.

அதன்பேரில், அஜித் பவாரும் பிரஃபுல் படேலும் சரத் பவார் கட்சியை உடைக்கும் வேலையை மேற்கொண் டுள்ளனா்’ என்றார்.
டில்லியில் பிரதமா் மோடியை அஜித் பவார் சந்தித்துப் பேசிய நிலையில் இக்குற்றச்சாட்டை சஞ்சய் ரவுத் முன்வைத்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *