சரத் பவார் கட்சியை உடைக்க பா.ஜ.க. முயற்சி சஞ்சய் ரவுத்

Viduthalai
1 Min Read

புதுடில்லி, டிச.15- ‘சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவார்) கட்சியை உடைக்கும் வேலையை, அஜித் பவார் மற்றும் பிரஃபுல் படேல் ஆகியோரிடம் ஒப்படைத் துள்ளது பாஜக என்று சிவசேனா (உத்தவ்) கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் ரவுத் தெரிவித்தார்.

மகாராட்டிரத்தில் அண்மையில் நடந்த பேரவைத் தோ்தலில் பாஜக-ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா-அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.

இதையடுத்து, முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதலமைச்சர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் பதவியேற்றனா்.
இந்நிலையில், சரத் பவார் கட்சியை உடைக்க முயற்சி நடப்பதாக, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (உத்தவ்) கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

அஜித் பவார் தலைமை யிலான தேசியவாத காங்கிரசில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே உள்ளார்; அதேநேரம், சரத் பவார் அணியில் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனா்.

இதில் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களை தங்கள்வசம் இழுக்கும் நோக்குடன் துணை முதலமைச்சர் அஜித் பவாரும், தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவா் பிரஃபுல் படேலும் செயல்பட்டு வருவதாக சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவா் சஞ்சய் ரவுத் குற்றஞ்சாட்டினார்.

இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘பாஜக கூட்டணியில் ஒரு கட்சிக்கு 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால் ஒன்றிய அமைச்சரவையில் ஓரிடத்தை பெற முடியும்.

அதன்படி, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசுக்கு ஒன்றிய அமைச்சா் பதவி கிடைக்க வேண்டு மென்றால் இன்னும் 5 நாடாளுமன்ற உறுப் பினர்கள் தேவை.

எனவே, சரத் பவார் கட்சியை உடைத்து, 5 பேரை தங்கள்வசம் இழுத்தால், தேசியவாத காங்கிரசுக்கு ஒன்றிய அமைச்சரவையில் ஓரிடம் தருவதாக பாஜக கூறியுள்ளது.

அதன்பேரில், அஜித் பவாரும் பிரஃபுல் படேலும் சரத் பவார் கட்சியை உடைக்கும் வேலையை மேற்கொண் டுள்ளனா்’ என்றார்.
டில்லியில் பிரதமா் மோடியை அஜித் பவார் சந்தித்துப் பேசிய நிலையில் இக்குற்றச்சாட்டை சஞ்சய் ரவுத் முன்வைத்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *