நீதிபதிகள் துறவிபோல வாழ வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 2 பெண் நீதிபதிகள் பணி நீக்கம் செய்யப் பட்டது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, “நீதிபதிகள் சமூக ஊடகங்களில் கருத்து கூறக்கூடாது. ஏனென்றால் பின்னர் தீர்ப்பு வழங்கும்போது, ஏற்கெனவே அந்த தீர்ப்பை மறைமுகமாக சோசியல் மீடியாவில் கூறிவிட்டார் என்ற கருத்து எழும்” எனக் குறிப்பிட்டு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.