வாக்குப்பதிவு இயந்திரத்தை சரிபாா்க்க கொள்கையை வகுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

Viduthalai
2 Min Read

புதுடில்லி, டிச.14 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சரிபாா்க்க கொள்கையை வகுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை, ஏற்கெனவே இந்த விவகாரம் தொடா்பாக கடந்த ஏப்ரலில் விசாரணை நடத்தி தீா்ப்பளித்த நீதிபதிகள் அமா்விலேயே தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் நேற்று (13.12.2024) அறிவுறுத்தியது.

மனு தாக்கல்
அரியானா மாநில மேனாள் அமைச்சா் கரண் சிங் தலால், 5 முறை சட்டப் பேரவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்ட லகான் குமாா் சிங்லா ஆகியோா் தரப்பில் இந்தப் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அரியானாவில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் இரண்டாம் இடம் பிடித்து தோல்வியைச் சந்தித்த இவா்கள் இருவரும், வாக்குப் பதிவில் சந்தேகங்களை எழுப்பியதோடு தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட், வாக்குப் பதிவு இயந்திரம், வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்தியரமான விவிபேட், சின்னங்களை பதிவேற்றும் பிரிவு மற்றும் இயந்திரத்தின் எரிக்கப்பட்ட நினைவகம் ஆகியவற்றை சரிபாா்ப்பதற்கு உரிய கொள்கையை வகுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

தோ்தல் ஆணையத்தின் தற்போதைய நடைமுறையில், இயந்திரத்தின் எரிக்கப்பட்ட நினைவகத்தை சரிபாா்ப்பதற்கான நடைமுறை தெளிவாகக் குறிப் பிடப்படவில்லை. மாறாக, அடிப்படை விவரங்களை மட் டுமே சரிபாா்க்கக் கூடிய வகையில் தோ்தல் ஆணையத் தின் தற்போதைய வழிகாட்டு நடைமுறை உள்ளது என்று தங்க ளுடைய மனுவில் குறிப்பிட்டனா்.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், பி.பி.வராலே ஆகியோா் அடங்கிய அமா்வில் நேற்று (13.12.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன், ‘தோ்தல் முடிவுகளை எதிா்த்து இந்த மனு தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை சரிபாா்ப்பதற்கு விரிவான நடைமுறையை வகுக்க உத்தரவிடக் கோரிக்கை விடுக்கிறது’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்த மனுவை ஏற்கெனவே, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் தொடா்பாக கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி விசாரணை மேற்கொண்டு தீா்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமா்வில் ஏன் தாக்கல் செய்யக் கூடாது?’ என்று கேள்வி எழுப்பி, இந்த மனு விசாரணைக்கான அமா்வு தொடா்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமா்வுக்கு இந்த மனுவை பரிசீலனைக்கு அனுப்புமாறு உச்சநீதிமன்ற பதிவுத் துறையைக் கேட்டுக்கொண்டனா்.
முன்னதாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக நூறு சதவீதம் எண்ணி ஒப்பிடக்கோரி ஜனநாயக சீா்திருத்த சங்கம் உள்ளிட்ட மேலும் சிலா் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி தள்ளுபடி செய்து தீா்ப்பளித்த நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘ஒரு நடைமுறை மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை தெரிவிப்பது தேவையற்ற சந்தேகங்களை வளா்க்கும். இந்தியாவில் தோ்தலை நடத்துவது மிகப் பெரிய பணி. தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னா் இரண்டாம் அல்லது மூன்றாம் இடம் பெற்ற வேட்பாளா்கள் கோரிக்கை விடுத்தால் 5 சதவீத வாக்குகளை எண்ணி ஒப்பீடு செய்யலாம்’ என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *