வெட்டிக்காடு பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர்கள் மாநில ஜூடோ போட்டியில் வெற்றி!

1 Min Read

வெட்டிக்காடு,டிச.12- பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளி, வெட்டிக் காடு 9.10.2024 முதல் 5.12.2024ஆம் தேதி வரையிலும் அரசு சார்பில் [SGFI] நடத்திய ஜூடோ போட்டியில் நம் பள்ளி மாணவர்கள் பங்கு பெற்று, மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

17 வயது பிரிவில் ஒன்பதாம் வகுப்பு மாணவி அ.யோகசிறீ மற்றும் த.தரணியா இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.
14 வயது பிரிவில் எட்டாம் வகுப்பு மாணவிகள் கோ.வானதி ச.தர்ஷினி இரண்டாம் இடமும், ரா.ஹே.ஆர்த்தி மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவிகளை தஞ்சாவூர் மாவட்ட உடற்கல்வித் துறை இயக்குநர் கற்பகம் வாழ்த்தி, உடன் இணைந்து எடுக்கப்பட்டுள்ள ஒளிப்படமும் இணைக்கப்பட்டுள்ளது.

நம் பள்ளியின் சார்பாக மாவட்ட அளவில் மொத்தம் எட்டு வகையான விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற அனுப்பப்பட்டனர். வெற்றி பெற்ற மாணவிகளை நம் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்தி அகம் மகிழ்ந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *