வெட்டிக்காடு,டிச.12- பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளி, வெட்டிக் காடு 9.10.2024 முதல் 5.12.2024ஆம் தேதி வரையிலும் அரசு சார்பில் [SGFI] நடத்திய ஜூடோ போட்டியில் நம் பள்ளி மாணவர்கள் பங்கு பெற்று, மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
17 வயது பிரிவில் ஒன்பதாம் வகுப்பு மாணவி அ.யோகசிறீ மற்றும் த.தரணியா இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.
14 வயது பிரிவில் எட்டாம் வகுப்பு மாணவிகள் கோ.வானதி ச.தர்ஷினி இரண்டாம் இடமும், ரா.ஹே.ஆர்த்தி மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவிகளை தஞ்சாவூர் மாவட்ட உடற்கல்வித் துறை இயக்குநர் கற்பகம் வாழ்த்தி, உடன் இணைந்து எடுக்கப்பட்டுள்ள ஒளிப்படமும் இணைக்கப்பட்டுள்ளது.
நம் பள்ளியின் சார்பாக மாவட்ட அளவில் மொத்தம் எட்டு வகையான விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற அனுப்பப்பட்டனர். வெற்றி பெற்ற மாணவிகளை நம் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்தி அகம் மகிழ்ந்தனர்.