மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்மீது நம்பிக்கை இல்லை தேர்தல் முறைகளில் மாற்றம் வேண்டும் சரத்பவார் வலியுறுத்தல்

Viduthalai
1 Min Read

மும்பை, டிச.10 நாட்டில் தேர்தல் முறைகளில் மாற்றம் வேண்டும். தற்போதுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்மீது நம்பிக்கை இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் 8.12.2024 அன்று தெரிவித்தார். வளர்ந்த நாடுகளாக கருதப்படும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் கூட மின்னணு வாக் குப்பதிவு இயந்திரங்களைப் புறக்கணித்து, வாக்குச்சீட்டு முறையைக் கடைபிடித்து வருகின்றன எனக் குறிப்பிட்டார்.
மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள மர்காவாடி பகுதியில் பேசிய நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சரத்பவார் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்களின் முடிவுகள் குறித்து மக்களுக்கு சந்தேகங்கள் எழுந்துள்ளன. பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்படுத்தும் வகையிலேயே அதன் முடிவுகள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எங்கோ தவறு நடக்கிறது என்ற எண்ணம் ஏராளமான மக்களி டையே எழுந்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் வாக்குச்சீட்டு முறையை கடைபிடித்துவரும் நிலையில், இந்தியாவில் மட்டும் ஏன் முடியாது? தேர்தல் முறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.’’
இவ்வாறு சரத்பவார் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *