புயல் பாதிப்பால் பாட நூல்கள், சீருடைகள் இழப்பு மீண்டும் வழங்கும் பணிகள் தீவிரம்

1 Min Read

சென்னை, டிச.10–- ஃபெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மழை, வெள்ள பாதிப்பில் பள்ளி மாணவர்களின் பாடநூல்கள், நோட்டுப்புத்தகங்கள், பைகள், சான்றிதழ்கள் ஆகியவை சேதம் அடைந்தன.

அவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை சேகரிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
அதன்படி முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் களத்தில் ஆய்வு செய்து அதுதொடர்பான புள்ளி விவரங்களை பள்ளி கல்வித்துறை வசம் ஒப்படைத்தனர்.

அதில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையில் தமிழ் வழி பாடநூல்களை 3,447 மாணவர்களும், ஆங்கில வழி பாடநூல்களை 1,865 மாணவர்களும் என மொத்தம் 5,312 பேர் இழந்துள்ளனர்.

இதுதவிர 2,900 மாணவர்கள் பள்ளிச் சீருடைகளையும் 2,567 பேர் புத்தக பைகளையும் 3,219 பேர் நோட்டு புத்தகங்களையும் மழை வெள்ளத்தில் இழந்துள் ளனர். அவர்களுக்கு புதிய பொருள்கள் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதே போல், விழுப்புரம் உட்பட மழை பாதிப்பில் புத்தகங்கள், பைகள் மற்றும் சீருடைகளை இழந்த மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கும் விரைவில் வழங்கப்பட உள்ளதாகவும் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *