காங்கிரசு பேரியக்கத் தலைவர் சோனியா காந்தி அம்மையாரின் 79 ஆம் பிறந்த நாளில் தமிழர் தலைவர் ஆசிரியரின் வாழ்த்துச் செய்தி!

1 Min Read
தங்களுடைய 79 ஆம் ஆண்டு பிறந்த நாளில் (9.12.2024) எங்களது அன்பான வாழ்த்தினை மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மக்களைப் பிளவுபடுத்தி, ஜனநாயகத்தின் மாண்பினை முடக்கும் சங் பரிவாரின் ஆட்சியை அகற்றும்  பணியில் ‘இந்தியா’ கூட்டணியினை வழிநடத்திடும் மாபெரும் பொறுப்பு தங்களிடமுள்ளது.
‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் கொள்கை அடிப்படையில், மேலும் உறுதிப்படவேண்டும். கூட்டணியில் ஏற்படும் சிற்சில பிரச்சினைகளைத் தங்களது சீரான வழிகாட்டுதலால் ஆரம்பத்திலேயே கண்டு, களைந்திட தாங்கள் முன்வர வேண்டும். ‘இந்தியா’ கூட்டணியின் வாக்குகள் சிதைந்துவிடாமல், அவற்றை ஒருங்கிணைத்துப் பெற்றிட வேண்டும். அந்தப் பணியில் வரவிருக்கும் தேர்தலில், தங்களது அறிவார்ந்த பணியினை எதிர்பார்க்கிறோம். தங்களது அரசியல் ஆளுமையில், அரவணைத்துச் செல்லும் பாங்கில், நமது நாட்டின் எதிர்காலம் சிறந்து விளங்கிட வேண்டும்.
தாங்கள் நல்ல உடல்நலத்துடன் நீடுழி வாழ்ந்து, காங்கிரசு கட்சிக்கு மட்டுமின்றி, காங்கிரசு தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் பணிகளும், நல்ல ஒருங்கிணைப்போடு சிறப்பாகத் தங்கள் தலை மையில் நடந்திட வாழ்த்துகிறோம்.
மீண்டும் எங்களது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *