சென்னை, டிச.10- தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று (9.12.2024) நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024-2025ஆம் நிதி ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் செலவுக்காக ரூ.3 ஆயிரத்து 531 கோடிக்கு துணை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
துணை பட்ஜெட்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி 2024-2025ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கை ரூ.3 லட்சத்து 48 ஆயி ரத்து 288 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது, கூடுதல் செலவினம் ஏற்பட்டதால், அதற்காக ரூ.3 ஆயிரத்து 531 கோடியே 5 லட்சத்துக்கு துணை பட்ஜெட்தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று (9.12.2024) நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, 2024-2025-ஆண்டுக்கான துணை நிதிநிலையை அறிக்கை தாக்கல் செய்தார்.
அப்போது, அவர் கூறியதாவது:-
ரூ.3,531 கோடிக்கு தாக்கல்
2024-2025ஆம் ஆண்டுக்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையை இம்மாமன்றத்தின் முன் வைக்க விழைகிறேன். இத்துணை மதிப்பீடுகள், மொத்தம் ரூ.3 ஆயிரத்து 531 கோடியே 5 லட்சம் நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கின்றன. 2024-2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்திட்ட மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு புதுப்பணிகள் மற்றும் புது துணைப்பணிகள் குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட இனங்களுக்கு சட்ட மன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதும், எதிர்பாரா செலவு நிதியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள தொகையினை அந்நிதிக்கு ஈடு செய்வதும் இத்துணை மானியக் கோரிக்கையின் நோக்கமாகும்.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்துக்கு, ஒன்றிய அரசு வைத்துள்ள வரைமுறைகளின் படி மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 0.50 சதவீதம் கூடுதல் கடன் பெறும் செயல் திறனுடன் இணைக்கப்பட் டுள்ள மின்துறை சீர்திருத்தத் திற்கான வழிகாட்டு நெறிமு றைகளின்படி ரூ.1,634 கோடியே 86 லட்சத்தை கூடுதல் நிதி இழப்பீட்டு மானியமாக அரசு அனுமதித்துள்ளது.
எரிசக்தி துறைக்கு
ரூ.1,500 கோடி
இதற்காக துணை நிதிநிலை அறிக்கையில் ரூ.1,500 கோடி எரிசக்தித் துறை மானியக் கோரிக்கை என்பதன் கீழ் சேர்க்கப்படுகிறது. மீதத் தொகை மானியத்தில் ஏற்படும் சேமிப்பில் இருந்து மறுநிதி ஒதுக்கத்தின் மூலம் செலவிடப்படும்.
அரசு போக்குவரத்து கழகங் களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உரிய ஓய்வூதியப் பணப்பலன்களை வழங்கிட, தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்திற்கு ரூ.372கோடியே 6 லட்சத்தை அரசு அனுமதித்துள்ளது. இத்தொகை, துணை நிதிநிலை அறிக்கையில் போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை என்பதன் கீழ் சேர்க்கப் பட்டுள்ளது.
நிதித்துறைக்கு ரூ.350 கோடி
தமிழ்நாடு எதிர்பாரா செலவு நிதியச் சட்டம் திருத்தம் செய்யப் பட்டு, எதிர்பாரா செலவு நிதி ரூ.150 கோடியில் இருந்து ரூ.500 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீட்டைப் பெறுவதற்காக, துணை நிதிநிலை அறிக்கையில் ரூ.350 கோடி நிதித்துறை மானியக் கோரிக்கை என்பதன் கீழ் சேர்க்கப் பட்டுள்ளது.
பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்திற்குரூ.70கோடியை மானியமாக அரசு அனுமதித் துள்ளது. இத்தொகை, துணை நிதிநிலை அறிக்கையில் பால்வளத் துறை மானியக்கோரிக்கை என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.
– இவ்வாறு அவர் பேசினார்.
எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி?
மின்துறை – ரூ.1,500 கோடி.
போக்குவரத்து துறை .372.06 கோடி
நிதித்துறை – ரூ.350 கோடி.
பால் வளத்துறை -ரூ.70 கோடி.