புதுக்கோட்டையில் சுயமரியாதை நாள் – குருதிக்கொடை

1 Min Read

புதுக்கோட்டை, டிச. 9- புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழர் தலவைர் ஆசிரியர் அவர்களின் 92ஆவது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு கழகத் தோழர்கள் குருதிக்கொடை வழங்கினார்கள்.
பெரியார் இரத்ததானக் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி இணைந்து நடத்திய இந்நிகழ்வானது திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமையில் புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் மு.அறிவொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

பல்வேறு பொறுப்புகளை வகித்து வரும் கழகத் தோழர்கள் கா.காரல்மார்க்ஸ், தி.பொன்மதி, மா.விநாயகமூர்த்தி, ஆறு.பாலச் சந்தர், அ.சரவணன், இரா.வெள்ளைச்சாமி, அ.தர்மசேகர், ம.மு.கண்ணன் ஆகியோர் குருதிக் கொடை வழங்கினார்கள். இதுவரை 171முறை குருதிக்கொடை வழங்கிய மாவட்டத் துணைத் தலைவர் சு.கண்ணன் கடைசியாக வழங்கியது தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17என்பதால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே குருதிக்கொடை வழங்க இயலும் என்கிற விதிப்படி இன்னும் 17 நாள்கள் இருப்பதால் இன்று குருதிக்கொடை செய்வதைத் தவிர்த் துக் கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்நிகழ்வில் மேலும் நகரத் தலைவர் ரெ.மு.தருமராசு, நகர இளைஞரணிச் செயலாளர் தாமரைச்செல்வன், மலர்மன்னன், அரிமளம் இந்திரஜித், பொன்ன மராவதி வீ.மாவலி, தோழியர் புனிதா பெரியார் பிஞ்சு சு.க.கதிரவன் உள்ளிட்ட தோழர்களும் கலந்து கொண்டனர். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்களின் பெயரில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு தோழர்கள் குருதிக்கொடை அளித்தமைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் குருதிப்பிரிவின் மருத்துவர் சரவணன் குருதிக்கொடை வழங்கிய தோழர்களுக்கும் திராவிடர் கழகத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *