இளங்கலை படிப்பு: யுஜிசி புதிய விதிமுறைகள்

2 Min Read

புதுடில்லி, டிச.7- 12ஆம் வகுப்பில் எந்த பாடப்பிரிவில் படித்திருந்தாலும், இளங்கலை படிப்பில் எந் தத் துறையிலும் சேரலாம் என பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளில் கூறப் பட்டுள்ளது.

தேசிய நுழைவுத்தேர்வு

இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) புதிய விதிமுறைகளை வெளி யிட்டுள்ளது.

குறிப்பாக பட்டப் படிப் புகளுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி தொடர்பாக வரைவு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக 12ஆம் வகுப்பு அல்லது நிலை 4இல் ஒரு மாணவர் எந்த பாடப்பிரிவில் படித் திருந்தாலும், இளங்கலை பட்டப்படிப்பில் எந்த துறையிலும் சேர முடியும்.

அதேநேரம் விரும்பும் துறையில் தேசிய அளவிலான அல்லது பல்கலைக் கழக அளவில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் அவர் வெற்றிபெறவேண்டும். இதைப் போல இளங்கலை பட்டப்படிப்பில் எந்த துறையில் படித்த ஒரு மாணவரும். சம்பந்தப் பட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றால் முதுகலையில் எந்த துறையையும் தேர்ந் தெடுக்கமுடியும்.

ஒரே நேரத்தில் இரு பட்டப்படிப்பு

நிறுவனங்களின் கல்வி மற்றும் கட்டமைப்பு வசதிகளை பொறுத்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக் கையிலான மாணவர்களை இளங்கலை 2ஆம், 3ஆம், 4ஆம் ஆண்டுகளில் நேரடி சேர்க்கை நடத்தலாம். இதைப்போல முதுகலை பட்டப்படிப்பில் 2ஆம் ஆண்டில் நேரடியாக அனுமதிக்க முடியும்.

மேலும் பாடத்திட் டம் மற்றும் கடன் கட்டமைப்பில் கொடுக் கப்பட்டுள்ள பாடப்பிரிவு, நிறுவனம் மற்றும் கற்றல் முறை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு மாணவர் ஒரே நேரத்தில் இரண்டு இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்புகளைத் தொடரலாம் என்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிமு றைகளில் கூறப்பட்டு உள்ளன.

யு.ஜி.சி.தலைவர் கருத்து

இந்த புதிய விதி முறைகள் அதிக நெகிழ்வுத்தன்மையை அறிமுகப்படுத்துவதுடன், ஒழுங்குமுறை கடினத் தன்மையை நீக்கி, மாண வர்களுக்கான உள்ளடக்கம் மற்றும் பலதரப்பட்ட கற்றல் வாய்ப்புகளை வழங்கும் என பல்கலைக் கழக மானியக் குழு தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-

யு.ஜி.சி. புதிய விதிமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் மாணவர்கள் தங்கள் கடந்தகால பாடப்பிரிவு தகுதியைப் பொருட்படுத்தாமல் எந்தவொரு துறையிலும் படிக்கலாம். இந்தச் சீர்திருத்தங்கள் மூலம், இந்திய உயர்கல்வி உலகளாவிய தரத்தை எட்டுவதை உறுதி செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *