மீண்டும் ஒரு புயல் உருவாகுமா?.. வானிலை மய்யம் விளக்கம்

Viduthalai
1 Min Read

* தெற்கு மத்திய வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பிருப்பதால், மீண்டும் புயல் வருமா என மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து வானிலை மய்யம், காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு -இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி வரும். ஆனால், தமிழ்நாட்டிற்கு எந்த ஆபத்தும் ஏற்பட வாய்ப்பில்லை. ஒரு வாரத்தில் புயலுக்கு வாய்ப்பில்லை என கூறியுள்ளது.

புயல் பாதிப்பு தமிழ்நாடு அரசு சிறப்புக் கடன் திட்டம்

இந்தியா
* ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள், தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சிறப்பு கடன் வழங்கப் படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்து உள்ளார். முதற்கட்டமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தி.மலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரியில் சிறு வணிகக் கடனுக்கான சிறப்பு முகாம் இன்று முதல் டிச.12 வரை நடைபெறுகிறது. விழுப்புரம், கடலூரில் தகுதியானவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை சிறு வணிகக் கடன் தரப்படுகிறது.

ஜார்க்கண்டில் கூட்டணி அமைச்சரவை பதவியேற்பு
* ஜார்க்கண்ட்டில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. அவரது ஜே.எம்.எம். கட்சியில் இருந்து 6 பேர், காங்கிரஸில் 4 பேர், ஆர்.ஜே.டி.யில் ஒருவர் என 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆளுநர் சந்தோஷ் கங்வார் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அமைச்சரவையில் 50% புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 81 இடங்களில் 56 இடங்களை இந்தியா கூட்டணி கைப்பற்றியிருந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *