உத்தரப்பிரதேசத்தில் மதவெறி ஆட்டம் முசுலிம் மருத்துவருக்கு வீட்டை விற்றதால் அப்பகுதி மக்கள் போராட்டமாம்

viduthalai
1 Min Read

மொராதாபாத், டிச.6 உ.பி.யின் மொராபாத்தில் 400-க்கும் மேற்பட்ட வீடுகளை கொண்ட டிடிஅய் சிட்டி சொசைட்டி உள்ளது. இங்கு வசிக்கும் ஒருவர் தனது வீட்டை முசுலிம் மருத்துவ ருக்கு விற்றதை எதிர்த்து மற்ற குடியிருப்பு வாசிகள் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து டிடிஅய் சிட்டி சொசைட்டி தலைவர் அமித் வர்மா கூறுகையில், “இது ஒரு இந்து சொசைட்டி. இங்கு 400-க்கும் மேற்பட்ட இந்து குடும் பங்கள் வசிக்கின்றன. மற்ற சமூகங்களை சேர்ந்த யாரும் இங்கு வசிப்பதை நாங்கள் விரும்பவில்லை” என்றார்.

குடியிருப்புவாசி ஒருவர் கூறுகையில், “பிற சமூகங்கள் இங்கு குடியேறினால் இந்துக்கள் வெளியேறத் தொடங்கி, தேவையற்ற மாற்றங்கள் ஏற்படலாம், காலனியின் தன்மை மாறலாம்” என நாங்கள் அஞ்சுகிறோம்” என்றார்.

மாவட்ட ஆட்சியர் அனுஜ் குமார் சிங் கூறுகையில், “சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேசி சுமூகத் தீர்வுக்கு முயன்று வருகிறோம்” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *