ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படையினர் தொடர் அட்டூழியம்!

viduthalai
1 Min Read

ராமேஸ்வரம், டிச.6- ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளது. கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. 2 படகுகளுடன் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையால், ராமேஸ்வரம் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். தமிழ்நாடு மற்றும் காரைக்காலில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகியுள்ளது.

இதனை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 14 மீனவர்களை சிறைப்பிடித்ததோடு, 2 விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கைதான மீனவர்களை இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தால் ராமேஸ்வரம் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் ராமேஸ்வரம் மீனவர்களை மீட்க நடவடிக்கை வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *