கிராமங்களில் கழகக் கொடி ஏற்றி, வைக்கம் நூற்றாண்டு, கலைஞர் நூற்றாண்டு விழா, தெருமுனைப் பிரச்சார கூட்டங்கள்

2 Min Read

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய கழகக் கலந்துரையாடலில்  முடிவு

அரசியல்

பாப்பிரெட்டிபட்டி, ஜூலை 24– அரூர் கழக மாவட்ட பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம் 21.7.2023 அன்று பாப்பிரெட்டிப்பட்டி பெரியார் படிப்பகம் ஆசிரியர் கி.வீரமணி நூலகத்தில் நடைபெற்றது. 

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய கழக செயலாளர் நல்.ராஜா தலைமை தாங்கினார். நகர கழக செயலாளர் சக்திவேல் அனை வரையும் வரவேற்றார். 

நிகழ்ச்சியில் கருத்துரை வழங் கிய மாவட்ட தலைவர் தங்கராஜ் கழகத்தின் கட்டமைப்பை பலப் படுத்த அனைத்து தோழர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வழிகாட் டல் உரை வழங்கிய மாநில கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி, அரூர் கழக மாவட் டம் உருவாக்கப்பட்டதன் நோக் கத்தையும், கழகம் ஏன் பலப் படுத்தப்பட வேண்டும் என்பதை யும், தமிழர் தலைவர் ஆசிரியர் தொடர்ச்சியாக சமூகப் பணியை 90 வயதிலும் ஆற்றுவதை சுட் டிக்காட்டி நம்முடைய பயணம், பணி எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கினார்.

மேலும் கழகக் கொடியேற்று தல், கிளைக் கழகங்களை வலுப்படுத்துதல், தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடத்து தல் பற்றி திட்டங் களை எப்படி வகுக்க வேண்டும் என்று தெளிவு படுத்தினார். 

நிகழ்ச்சியில்  இளைஞரணி பொறுப்பாளர்கள் சாய் குமார், அய்யனார் சிவானந்தம், ஆகி யோர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைத் துறையை சேர்ந்த பாடகர் ஜெயக்குமார், பெண்கள் கழக செயல்பாடுகளில் பங்கெடுப் பதை உறுதிப்படுத்த வலியுறுத் தினார்.

பகுத்தறிவாளர கழக ஒன்றிய தலைவர் ராஜ வேங்கன் கழக வரலாற்றை எடுத்துரைத்து கழ கப் பணியை சிறப்பாக நடத்திட வேண்டுகோள் விடுத்தார். கூட் டத்தில் கழக செயல்வீரர்கள் நாச்சியப்பன், அபிஸ் குமார், ராகுல் ராமமூர்த்தி, ஹரிஷ்,வான்மேகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றி யத்தில் 10 கிராமங்களில் கழகக் கொடி ஏற்றி தெருமுனைப் பிரச் சார கூட்டங்கள் நடத்துவது, கலைஞர் நூற்றாண்டு வைக்கம் நூற்றாண்டு விழாக்களை முன் னிட்டு பாப்பிரெட்டிப்பட்டியில் பொதுக்கூட்டம் நடத்துவது, கழகத் தோழர்கள்  பட்டியலை தயாரித்து முறைப்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *