தமிழர் தலைவரின் நூல்கள்-பல மொழிகளில் பதிப்பிக்கவும், பரப்பவும் வேண்டும்

Viduthalai
3 Min Read

வாழ்வியல் சிந்தனைகள் நூலினை வெளியிட்டு நார்வே வே.நடராஜன் வாழ்த்துரை!

தஞ்சை, டிச. 5- தஞ்சை நீலகிரி ஊராட்சி யில் அமைந்துள்ள குறள் நெறியாளர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகத்தில் வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் 92ஆவது பிறந்தநாள் விழா, வாழ்வியல் சிந்தனைகள் பாகம் -18 வெளியீட்டு விழா எழுச்சியுடன் நடைபெற்றது
வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டத் தலைவர் வெள்ளூர் சோ. முருகேசன் தலைமை வகித்தார். செயலாளர் இரா. செந்தூரபாண்டியன் வரவேற்புரை ஆற்றினார்.
இயக்குநர் புலவர் வீ. பொற்கோவன் முன்னிலை வகித்தார்.
தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ. இராமலிங்கம், ஆடிட்டர் சரவணன், நார்வே செவிலியர்.லதா நடராசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங் தொடக்க உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் நார்வே நாட்டிலிருந்து வருகை தந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நார்வே வே.நடராசன் வாழ்வியல் சிந்தனைகள் 18 ஆம் பாகத்தினை அறிமுகம் செய்து வெளியிட்டார்.
தமது உரையில் தமிழர் தலைவர்ஆசிரியர் வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத் தமைக்கு மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் கூறும் நல்லுலகம் சார்பில் எனது வாழ்த்தையும் இணைத்துக் கொள்கிறேன்.
வாழ்வியல் சிந்தனைகள் நூலினை வெளியிடும் வாய்ப்பை வழங்கியமைக்கு மிகுந்த பெருமையுடன்அடைகிறேன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

200 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் 65 தலைப்புகளில் கீழ் அடங்கியுள்ள கருத்துக்கள் எளிய நடையில் எல்லா வயதினரும் பயன்பெறும்வகையில் மிகச் சிறப்பாக எழுதியுள்ளார்கள். எனதுபாராட்டைதெரிவித்துக்கொள்கிறேன் இவரது நூல்களை பல மொழிகளில் பதிப்பித்து பரப்ப வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
ஆசிரியர் அவர்கள் நூற்றாண்டை கடந்து வாழ வேண்டுமென எனது வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்எனக்கூறினார். இறுதியில் தமிழர் தலைவரின் மகத்தான தொண்டில் சமூகம் – அரசியல் என்ற தலைப்பில் இரா.பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார்
தமது உரையில். இள வயது முதற் கொண்டு தந்தை பெரியாரை பேசத் தொடங்கி, 92 அகவையான இன்று வரை ஆற்றி வரும் தொண்டினை தொகுத்து ரைத்தார்.

விடுதலை ஆசிரியராக, பொதுச் செயலாளராக, தலைவராக, தமது அயராத உழைப்பால் தொண்டு செய்து வரும் தமிழர் தலைவர், சட்ட மேதையாக, எழுத்தாளராக, கருத்தாளராக, வாழ்வில் தந்த வள்ளலாகதிகழ்வதுடன், அகில இந்தியதலைவர்கள், தமிழ்நாட்டுத் தலைவர்களின் பேரன்பை பெற்றவராக திகழ்ந்து வருகிறார்என்பதை விளக்கியும், பெரியார் உலகம் அமைக்கும் பணியில் தொண்டாற்றி வருவதையும் எடுத்துக் கூறி ஒரு சிறப்பாக உரையாற்றினார் உரையைக் கேட்டு மகிழ்ந்த புலவர் வீ.பொற்கோவன் கட்டியணைத்து பாராட்டை தெரிவித்தார்.
நிறைவாக வாசகர் வட்ட பொருளாளர் கு.குட்டிமணி நன்றி கூறினார்.

நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், மாநில கலைத்துறைச் செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில பெரியார் வீர விளையாட்டுக் கழக செயலாளர் கபடி நா.இராமகிருட்டிணன், விஜயலட்சுமி பரசுராமன், மாநகர தலைவர்பா.நரேந்திரன், மாநகர இணைச் செயலாளர் இரா.வீரக்குமார், மாவட்ட ப.க.செயலாளர் பாவலர் பொன்னரசு, கரந்தை தலைவர் தனபாலன், தஞ்சை தெற்கு ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர் துரை. தன்மானம் ,வாசகர் வட்ட உறுப்பினர்கள் பொறியாளர் ப.பாலகிருட்டிணன், பொறியாளர் அமர்நாத், தஞ்சை மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ச. சந்துரு, உரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் மாநல். பரமசிவம், ஒன்றிய துணைச்செயலாளர் நெடுவை கு.லெனின், பேரா. மாலதி, பேரா. சதீசு, பேரா.பிரபு, செயராசு, புலவர் இரா.மோகன்தாசு உள்ளிட்ட தோழர்கள், பெருமக்கள் பங்கேற்று வாழ்வியல் சிந்தனைகள் நூலினை பெற்று மகிழ்ந்தார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *