ஆசிரியர் தொலைபேசி மூலமாக ஆறுதல் கூறினார்
கன்னியாகுமரி, டிச.4- கன்னியாகுமரி சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதி தலைமை குரு. குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் அவர்களது மனைவி ரமணி பாய் அவர்கள் 2.12.2024 அன்று காலை மறைவுற்றார்கள். அம்மையாரின் உடலுக்கு குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக மாலை வைத்து 3.12.2024 அன்று காலை 11 மணிக்கு சுவாமிதோப்பு அன்பு வனத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அடிகளாரிடம் தொலைபேசி மூலமாக ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்கள் திராவிடர் கழக குமரிமாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம், மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.