ஆசிரியர் விடையளிக்கிறார்

3 Min Read

கேள்வி 1: ஸநாதன எதிர்ப்பைத் திசைதிருப்பவே தமிழ் தேசிய அரசியல் அதிகமாகப் பேசப்படுகிறது என்ற கருத்து சரியானதா?
– சூர்யா, கருமண்டபம்
பதில் 1: அதுசரியே என்பதைத் தாண்டி, இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகளை மறைக்கவும்கூட!

கேள்வி 2: உத்தரப் பிரதேசத்தில் மசூதியை ஆய்வு செய்வதாகக் கூறி மீண்டும் மதக் கலவரத்தை ஏற்படுத்தி யிருக்கிறார்களே?
– நிவேதிதா, குடந்தை
பதில் 2: அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகள் இந்த நிலைமைக்குத் தூண்டுதலாக இருக்கிறதோ என்ற அய்யமும் பரவலாக ஆங்காங்கே உள்ளது!

கேள்வி 3: தந்தை பெரியாரின் கொள்கைகளை அமல்படுத்துவதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாகச் செயல்படுவது குறித்து?
– செழியன், பொள்ளாச்சி
பதில் 3: சரியான திசையில் ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு ஒவ்வொரு நாளும் தமது சாதனைகள் மூலம் புகழ் மகுடம் சூட்டுகிறார் நமது ஒப்பற்ற துணை முதலமைச்சர்!

கேள்வி 4: மோடியின் ஆட்சியில் மேற்கத்திய நாடுகளுக்கு அதிகளவில் இந்தியர்கள் புலம் பெயர்ந்து கொண்டிருப்பதாக வரும் புள்ளி விவரங்கள் குறித்து தங்கள் கருத்து என்ன?
– சிந்து, பாளையங்கோட்டை
பதில் 4: அதற்குக் காரணங்களை அரசியல் ஆய்வாளர்கள் – விருப்பு, வெறுப்பு இன்றி ஆய்வு செய்தல் அவசியம்!

கேள்வி 5: ‘விஸ்வகர்மா’ எனும் குலக்கல்வித் திட்டத்தை அமல்படுத்த மறுக்கும் ‘திராவிட மாடல்’ முதலமைச்சரை ஏனைய மாநில முதலமைச்சர்களும் பின்தொடர்வார்களா?
– மலர்விழி, திருச்சி
பதில் 5: இவரைப் போலவே கொள்கைத் தெளிவும், துணிவும் இருந்தால் செய்வார்கள்! அந்த மண் பெரியார் மண்ணாக மாறினால் மட்டுமே அது சாத்தியம்!

கேள்வி 6: பன்னாட்டுப் பேசு பொருளாகிவிட்ட அதானி ஊழலை நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுப்பதற்குக் காரணம் மோடியா?
– பாரி, கோவை
பதில் 6: அவர் மட்டும் என்று கூற முடியாது. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். உள்பட எல்லோரது கூட்டுத் தடுப்பு முயற்சியும் கூட காரணமாக இருக்கலாம்.

கேள்வி 7: தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் தனது பிறந்த நாளில், 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதி களுக்கு மேல் வென்றெடுக்க உறுதி பூண்டிருப்பது குறித்து?
– அன்பு, ஆவடி
பதில் 7: அவரது பொறுப்பும் கடமையுமே அவரை நாளும் மக்களிடையேயும், அரசியல் ஆய்வாளர்களிடமும் மென்மேலும் உயர்த்திக் காட்டப் பெரிதும் காரணமானவை ஆகும்!

கேள்வி 8: 92ஆவது பிறந்த நாள் காணும் தங்களது 82 ஆண்டு பொது வாழ்க்கையானது உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்து கூறுவீர்களா?
– சம்பத், ஈரோடு
பதில் 8: தனிப்பட்ட வாழ்க்கை இருந்தால் அல்லவா அது என் வாழ்க்கையிலே ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் பற்றி கூறிட!
எல்லா நேரமும் எனக்கு இயக்க, பொதுவாழ்வுதான். எனது குருதிக் குடும்பத்திற்கும் அதில் ஓர் உதவிடும் அம்சம்; அவ்வளவுதான்!

கேள்வி 9: இந்நாட்களில் இணைய வழி மோசடிகளால் மூத்த குடிமக்கள் அதிகம் பாதிக்கப்படுவது குறித்து?
– ராகுல், நெல்லை
பதில் 9: பரிதாபத்திற்குரியது: ஆனால், எப்படி மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் வீழ்ந்து வருகின்றனர் என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி!

கேள்வி 10: இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல்களும். கைது நடவடிக்கைகளும் குறையவில்லையே?
– மீனாட்சி, மண்டபம்
பதில் 10: மேலும் கூடியிருக்கிறது. “கத்தி போச்சு: வாலு வந்தது டும் டும் டும்” என்ற கதைதான் நம் நினைவுக்கு வருகிறது!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *