வெல்வார் வீரமணி!

1 Min Read

இவருக்கொரு
வணக்கம்
செய்வோம்!
இவர் மட்டும்தானே
ஈரோட்டு ஏந்தலின்
கைத்தடியை
கடைசிவரை
பற்றியவர்!
இவருக்கொரு
நன்றி கூறுவோம்!
இவர்தானே
எந்தைப் பெரியாரின்
இறுதி மூச்சுக்குப்
பின்னும்
இன்றுவரை – ஏன்
நாளைக்கும்
இயக்கப் புரவியை
ஈடில்லா வேகத்தில்
செலுத்தும் வீரர்!
திராவிட சிந்தனையின்
பகுத்தறிவாளர்
‘விடுதலை‘ ஏட்டின்
இரத்த நாளம்
விடாது விடுதலை
அவரை நாளும்
மாசிலா சுற்றுச்
சூழலின் காற்று
சமூக நீதியின்
மூல ஊற்று!
முழு மூச்சையும்
பெரியாருக்கே
ஈந்த
இரசாயனக்
கூட்டு!
பெரியார் உலகம்
என்னும் அலைகள்
சிறகடித்துப்
பறக்கின்றன
அவர்தம்
சிந்தனை வானில்!
தொட்டதை அவர்
விட்டதில்லை
வெற்றி காணாமல்
ஓய்வதும் இல்லை
வெல்வார் வீரமணி
ஒலிப்பார் வெற்றி மணி!
வாழட்டும் அவர்
வையத்து
நாட்களெல்லாம்!

– கவிஞர் கலி.பூங்குன்றன் –

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *