மகாராட்டிரத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து 11 போ் உயிரிழப்பு

viduthalai
1 Min Read

புனே, நவ.30 மகாராட்டிர மாநிலம், கோண் டியா மாவட்டத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத் தில் 11 பேர் உயிரிழந்தனா். 23 போ் காய மடைந்தனர்.

இதுகுறித்து காவல் துறை மூத்த அதிகாரி கூறியதாவது: மகாராஷ்டிர அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து 36 பயணிகளுடன் பந்தாரா பகுதியில் இருந்து கோண்டியா மாவட்டத்தை நோக்கி புறப்பட்டது. 29.11.2024 அன்று பிற்பகல் 12.30 மணியளவில் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, கட்டுப் பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 11 பய ணிகள் உயிரிழந்தனா். காயமடைந்த 23 போ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டுள்ள தாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *