ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டை இருந்தால் ரூ.10,000 அபராதம்!

1 Min Read

புதுடில்லி, நவ.30 ஏற்கனவே இருக்கும் நிரந்தர கணக்கு எண் அட்டையை மாற்றிவிட்டு, மேம் படுத்தப்பட்ட பான் அட்டையை வழங்கும் பான் 2.0 திட்டத்தை ஒன்றிய அரசு ஒரு சில நாள்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. வரி செலுத்துவோருக்கும், பான் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் க்யூஆர் கோடு கொண்ட பான் அட்டை இலவசமாகவே வழங் கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம், க்யூஆர் கோடு கொண்ட பான் அட்டை பயன்பாட்டு வருவதோடு, பல்வேறு பயன்பாடுகள் எளிதாக்கப்படும். அது மட்டுமல்லாமல் ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகள் இருந்தாலும், ஒருவர் தனது பெயருடன் தவறான பான் அட்டையை இணைத்திருந்தாலும் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

ஆனால், இவை எல்லாம் தெரியாமல் நடந்த தவறாக எடுத்துக் கொள்ளப்படாது. மாறாக அபராதம் விதிக்கப்படும். இந்த புதிய டிஜிட்டல் மயமாக்கப்படும் பான் அட்டை, பயன்பாட்டுக்கு வந்ததும், மிக எளிதாக போலி பான் அட்டைகளும், பான் அட்டைகளில்

கொடுக்கப்பட்டிருக்கும் தவறான தகவல்களும் கண்டுபிடிக் கப்பட்டுவிடும்.
அதாவது வருமான வரித்துறை சட்டம் 1961இன் 272 பி பிரிவின்படி, ஒரு இந்திய குடிமகன், ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளை வைத்திருப்பதை தடை செய்கிறது. ஒருவேளை அவ்வாறு வைத்திருந்தால் அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *