பிரதமர் மோடியின் முழுக் கவனமும் எங்குள்ளது? பணவீக்கத்தை குறைத்துக் காட்டுவதில் மட்டுமே உள்ளது! காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு!

1 Min Read

புதுடில்லி, நவ.29- பிரதமர் மோடியின் முழுக் கவனமும் பணவீக்கத்தை குறைத்து காட்டுவதில் மட்டுமே உள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி யுள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள சமூகவலை தளப் பதிவில், நுகர்வோர் விலை குறியீடு மற்றும் மொத்த விற்பனை குறியீட்டை பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க., அரசு குறைத்துக் காட்டுவதாக சாடியுள்ளார்.

பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாக ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் கூறுகிறது என தெரிவித்துள்ள ஜெய்ராம் ரமேஷ், ஆனால் மக்களின் சுமை குறையவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். நாட்டில் விலைவாசி தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது என தெரிவித்துள்ள அவர், பணவீக்கத்தை கட்டுப்படுத்தாமல், அதனை குறைத்து காட்டுவதில் மட்டுமே மோடி அரசு கவனமாக உள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார். பணவீக்கத்தை கட்டுப் படுத்துவதற்கான நடவடிக்கை களை உடனே மேற்கொள்ள வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *