ராஞ்சி, நவ.29 ஜார்க்கண்டின் 14 ஆவது முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் நேற்று (28.11.2024) பதவியேற்றுக் கொண்டார்.
ராஞ்சியில் மொராபாடி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹேமந்த் சோர னுக்கு ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் பதவிப் பிர மாணமும், ரகசிய காப்பு பிர மாணமும் செய்து வைத்தார்.
49 வயதாகும் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவியேற்பது இது நான்கா வது முறையாகும்.பதவியேற்பு விழாவிற்கு ஹேமந்த் சோரன் குர்தா மற்றும் பைஜாமா அணிந்திருந்தார். பதவியேற்பதற்கு முன், ஜே.எம்.எம். தலைவரும், அவரது தந்தையுமான ஷிபு சோரனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் 56 இடங்களுடன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. கடந்த 2000 ஆம் ஆண்டு நவ.15 இல் பிகாரைப் பிரித்து ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது.
முன்னதாக, ஜார்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் 24.11.2024 அன்று நடை பெற்றது. இதில் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஹேமந்த் சோரன் தோ்வு செய்யப்பட்டார். தொடா்ந்து ஆளுநா் மாளிகைக்குச் சென்று ஆளுநா் சந்தோஷ் கங்வா ரிடம் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரன் உரிமை கோரியிருந்தார்.
இதையடுத்து, அந்த மாநிலத்தின் முதல மைச்சராக 4 ஆவது முறை யாக ஹேமந்த் சோரன் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி, ஷிபு சோரன், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் ேஹமந்த் சோரன் அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி, முத்தமிழறிஞர் கலைஞர் குறித்த புத்தகத்தினை நினை வுப் பரிசாக வழங்கினார்.