விமானத்தில் அத்துமீறும் பயணிகளைக் கையாள விரிவான வழிமுறைகள் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

viduthalai
1 Min Read

புதுடில்லி, நவ.28- விமானத்தில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் பயணிகளைக் கையாள்வது தொடா்பான வழிமுறைகளை வகுக்குமாறு ஒன்றிய அரசு மற்றும் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கு (டிஜிசிஏ) உச்சநீதிமன்றம் 26.11.2024 அன்று உத்தரவிட்டது.

கடந்த 2022, நவம்பரில் ஏா்இந்தியா விமானத்தில் பயணித்த 73 வயது மூதாட்டி மீது குடிபோதையில் இருந்த சக ஆண் பயணி சிறுநீா் கழித்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிகழ்வில் பாதிக்கப்பட்ட பெண் பயணி தாக்கல் செய்த பொதுநல மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமா்வுமுன் 26.11.2024 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், பன்னாட்டு விதிமுறைகளுக்கு ஏற்ப ஒழுங்கீன பயணிகள் குறித்து தற்போதுள்ள வழிகாட்டுதல்களை ஆய்வு செய்து, பொருத்தமான முறையில் விதிகளை மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு சொலிசிட்டா் ஜெனரல் அய்ஸ்வா்யா பாட்டீயிடம் கேட்டுக் கொண்டனா். மேலும், இதுபோன்ற பயணிகளைக் கையாள்வது தொடா்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை (எஸ்ஓபி) உருவாக்க ஒன்றிய அரசு, டிஜிசிஏ, அனைத்து விமான நிறுவனங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மேலும், உச்சநீதிமன்ற நீதிபதி சூா்யகாந்துடன் பயணித்தபோது, மதுபோதையில் சக பயணி ஒருவா் விமான கழிவறையில் நீண்ட நேரம் பூட்டிக் கொண்ட நிகழ்வை கூறிய நீதிபதி விஸ்வநாதன் தனது சொந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *