திறனாய்வுக்குப் பாராட்டு! பெரியார் அம்பேத்கர் சிந்தனை மய்யம் – ஆஸ்திரேலியா

viduthalai
2 Min Read

சமூகத்தில் நிலவும் ஜாதியப் பாகுபாடுகளைத் திறனாய்வு செய்த கிரிதரன் சிவராமனுக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெரியார், அம்பேத்கர் சிந்தனை மய்யம் பாராட்டுத் தெரிவித்துள்ளது.

அண்ணா மகிழ்நன்

பெரியார் அம்பேத்கர் சிந்தனை மய்யம் – ஆஸ்திரேலியா அமைப்பின் தலைவர் அண்ணா மகிழ்நன் கூறியுள்ளதாவது:
“ஆஸ்திரேலிய மனித உரிமை ஆணையம் மற்றும் இனப் பாகுபாடு தொடர்பான கணகாணிப்பு அமைப்பின் ஆணையர் கிரிதரன் சிவராமனின் சமூகத்தில் நிலவும் வேறுபாடுகளை களைந்தெடுத்து ஜாதிய வேறுபாடுகளை நீக்கும் வழிகள் தொடர்பான தொடர் பணிகளுக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெரியார், அம்பேத்கர் சிந்தனை மய்யம் பாராட்டுகள் தெரிவிக்கின்றது.

பெரும்பான்மைச் சமூக இன வெறுப்பை ஆய்வு செய்து அதனை களையும் வழிமுறைகளை முன்னெடுப்பதன் மூலம் மேற்கத்திய நாடுகளில் ஜாதி அடிப்படையிலான ஒடுக்குமுறையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வெற்றி பெற்ற முதல் நாடுகளில் ஆஸ்திரேலியா இடம் பெறுகிறது. “இது திராவிட சித்தாந்தத்திற்கும், ஒடுக்கப்பட்ட சமுகங்களுக்கும் கிடைத்த வெற்றியாகும், குறிப்பாக வெளிநாடுகளில் ஜாதியால் ஒடுக்கப்பட்ட இந்துக்களுக்கு கிடைத்த வெற்றி” என்று டாக்டர் அண்ணா மகிழ்நன் அந்தப் பாராட்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சுமதி விஜயகுமார்

பெரியார் அம்பேத்கர் மய்யம், ஆஸ்திரேலியா அமைப்பின் பொதுச் செயலாளர் சுமதி விஜயகுமார் குறிப்பிட்டதாவது:
“ஆஸ்திரேலிய மனித உரிமை அமைப்பு பெரியார் மற்றும் டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகளைப்பிரதிபலிக்கிறது – சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் பாகுபாடுகளை கட்டுப்படுத்தி சமத்துவத்திற்கு வாய்ப்பு வழங்குதல் சமூக நலனுக்கு உகந்த ஒன்றாகும்.
சட்டப் பாதுகாப்பு என்பது ஜாதியப் பாகுபாட்டினால் பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கு சட்ட ஆலோசனைகள் மற்றும் அவர்களின் உரிமைகளை மீட்டு நீதி வழங்கும் பயணத்திற்கு கிடைத்த உந்துதல் ஆகும். பிளவுபடாத சமூகத்தை நோக்கிய முன்னெடுப்பில் ஆஸ்திரேலியா முன்மாதிரியாக அமைகிறது” என்று ஆஸ்திரேலிய பெரியார், அம்பேத்கர் சிந்தனை மய்யத்தின் பொதுச் செயலாளர் சுமதி விஜயகுமார் கூறினார்.

“சிவராமனின் பணி ஜாதியால் ஒடுக்கப்பட்ட சமுகங்களுக்கு ஊக்கத்தைத் தருகிறது.

பெரியார், அம்பேத்கர் சிந்தனை மய்யம் ஆஸ்திரேலிய மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும், அவற்றின் அதன் பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்தயும் துணை நிற்கும்” என்றும் சுமதி விஜயகுமார் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *