தைத்திருநாளில் சி.ஏ. தேர்வா? கண்டனங்களையடுத்து தேதியை மாற்றியது பட்டயக் கணக்காளர் நிறுவனம்

1 Min Read

புதுடில்லி, நவ.26- இந்தியா முழுவதும் சி.ஏ. (சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்) எனப்படும் பட்டய கணக்காளர் தேர்வு அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 12, 14, 16, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் அறிவித்திருந்தது.

ஜனவரி 14 அன்று தமிழ்நாட்டில் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் சி.ஏ. தேர்வை நடத்துவது இந்த தேர்வை எதிர்கொள்ள இருக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என அரசியல் கட்சிகள், அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

குறிப்பாக, பொங்கல் விழா அன்று சி.ஏ. தேர்வுகளை ஒன்றிய அரசு அறிவித்ததற்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்தார். அதோடு தி.மு.க மக்களவை உறுப்பினர் கனிமொழியும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இதிலும் மொழி பிரச்சினையை எதிர்க்கட்சிகள் பிரச்சாரமாக கொண்டு வருகின்றனர் என்றும் தேர்வு ஆணையத்தின் முடிவுகளில் ஒன்றிய அரசு தலையிடுவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வந்த நிலையில், ஜனவரி மாதம் 14ஆம் தேதி நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வை ஜனவரி 16ஆம் தேதிக்கு மாற்றி இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சி.ஏ. பவுண்டேசன் தேர்வு 2025 ஜனவரி 12, 16, 18,20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் அறிவித்துள்ளது.

தை பொங்கல் நாள் அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட பட்டயக் கணக்காளர் தேர்வுகளை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என மக்களவை உறுப்பினர், சு.வெங்கடேசன் உள்பட பலரும் வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *