தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு

1 Min Read

வேலை வாய்ப்பு அலுவலகங்களின் மூலமாக பதிவு மூப்பு, வயது வரம்பு ஆகியவற்றின் அடிப்படையில் 1 : 5 என்ற விகிதாச்சார அளவில் பணி நியமனம் செய்வதே சாலச் சிறந்தது. இதன் மூலம் பல ஆண்டுகளாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்துக் கொண்டிருக்கும், வயது முதிர்வு ஆகும் இளைஞர்களுக்கு பணி கிடைக்க வாய்ப்பிருக்கும்.

நேரடி நியமனம் என்பது, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாமலேயே , எந்த வித பதிவு மூப்பு இல்லாமல் உடனே பணி கிடைத்து விடுகிறது. பல ஆண்டுகளாக பதிவு செய்து, பதிவு மூப்பு இருந்தும் பல்லாயிரக் கணக்கானோர் பணி வாய்ப்பை இழக்க நேரிடுகிறது. எனவே நமது திராவிட மாடல் அரசு இதை பரிசீலனை செய்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தின் பதிவு மூப்பு அடிப்படையில் பணி கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.

– இரா.புகழேந்தி, வேலை வாய்ப்புத் துறை (பணி நிறைவு)
மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம், சிவகங்கை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *