மேற்கு வங்கத்தில் ஆறு தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி

1 Min Read

கொல்கத்தா, நவ.24 மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற 2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் தனது பதவியிலிருந்து விலகியதை செய்ததை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடந்தது.
இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 6 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வந்தது.

இந்த தேர்தல் மாநிலத்தை ஆளும் கட்சிக்கு முக்கியமான அரசியல் சோத னையாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த பெண் டாக்டர் கொலை வழக்கால் மாநிலத்தில் பெறும் சர்ச்சையான சூழ்நிலை நிலவியது. இதற்கிடையே இந்த இடைத்தேர்தல் நடந்ததால் அரசியல் கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. முன்னதாக இதில் 5 தொகுதிகள் திரிணாமுல் காங்கிரஸ் வசமும், ஒரு தொகுதி பாஜக வசமும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்பகல் வெளியிடப்பட்ட வாக்கு எண்ணிக்கை நேற்று (22.11.2024) இறுதி முடிவில் 6 தொகுதிகளிலும் திரிணாமுள் காங்கிரஸ் கட்சிவேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *