கொல்கத்தா, நவ.24 மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற 2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் தனது பதவியிலிருந்து விலகியதை செய்ததை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடந்தது.
இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 6 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வந்தது.
இந்த தேர்தல் மாநிலத்தை ஆளும் கட்சிக்கு முக்கியமான அரசியல் சோத னையாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த பெண் டாக்டர் கொலை வழக்கால் மாநிலத்தில் பெறும் சர்ச்சையான சூழ்நிலை நிலவியது. இதற்கிடையே இந்த இடைத்தேர்தல் நடந்ததால் அரசியல் கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. முன்னதாக இதில் 5 தொகுதிகள் திரிணாமுல் காங்கிரஸ் வசமும், ஒரு தொகுதி பாஜக வசமும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்பகல் வெளியிடப்பட்ட வாக்கு எண்ணிக்கை நேற்று (22.11.2024) இறுதி முடிவில் 6 தொகுதிகளிலும் திரிணாமுள் காங்கிரஸ் கட்சிவேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.