கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் – 24.11.2024

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
⇒ ஜார்க்கண்டில் பாஜ பஞ்சர்: கெத்து காட்டிய கல்பனா-ஹேமந்த்; அனைத்து பந்திலும் சிக்சர் விளாசி வென்றனர். 43 தொகுதிகளில் போட்டியிட்ட ஜேஎம்எம் 34 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றியுடன் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
⇒ வயநாடு மக்களவை தொகுதியில் 4.10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி அபார வெற்றி: ராகுல்காந்தியின் சாதனையை முறியடித்தார். மக்களின் நம்பிக்கையையும் கனவு களையும் உணர்ந்து அவர்களின் பிரதிநிதியாக செயல்படுவேன்: பிரியங்கா காந்தி

இந்தியன் எக்ஸ்பிரஸ்:
⇒மேற்கு வங்க இடைத் தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், ஆறு 6 தொகுதியையும் கைப்பற்றியது, மதரிஹாட்டை பாஜகவிடம் இருந்து கைப்பற்றியது.
⇒ கருநாடகா இடைத்தேர்தலில் 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி; பாஜக – மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு பலத்த அடி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
⇒அவுட்சோர்சிங் நிறுவனம் மூலம் ஆசிரியர்களை நியமிக்கும் நடவடிக்கையை அண்ணா பல்கலைக் கழகம் கைவிட்டது.

தி ஹிந்து:
⇒ லஞ்ச வழக்கில் கவுதம் அதானி, மருமகன் சாகர் ஆகியோருக்கு அமெரிக்க எஸ்இசி அணைப்பானை அனுப்பியுள்ளது. 21 நாட்களுக்குள் பதில் அளிக்கா விட்டால், தீர்ப்பு வழங்கப்படும் என எச்சரிக்கை

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *