கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் – 24.11.2024

Viduthalai
1 Min Read

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
⇒ ஜார்க்கண்டில் பாஜ பஞ்சர்: கெத்து காட்டிய கல்பனா-ஹேமந்த்; அனைத்து பந்திலும் சிக்சர் விளாசி வென்றனர். 43 தொகுதிகளில் போட்டியிட்ட ஜேஎம்எம் 34 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றியுடன் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
⇒ வயநாடு மக்களவை தொகுதியில் 4.10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி அபார வெற்றி: ராகுல்காந்தியின் சாதனையை முறியடித்தார். மக்களின் நம்பிக்கையையும் கனவு களையும் உணர்ந்து அவர்களின் பிரதிநிதியாக செயல்படுவேன்: பிரியங்கா காந்தி

இந்தியன் எக்ஸ்பிரஸ்:
⇒மேற்கு வங்க இடைத் தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், ஆறு 6 தொகுதியையும் கைப்பற்றியது, மதரிஹாட்டை பாஜகவிடம் இருந்து கைப்பற்றியது.
⇒ கருநாடகா இடைத்தேர்தலில் 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி; பாஜக – மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு பலத்த அடி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
⇒அவுட்சோர்சிங் நிறுவனம் மூலம் ஆசிரியர்களை நியமிக்கும் நடவடிக்கையை அண்ணா பல்கலைக் கழகம் கைவிட்டது.

தி ஹிந்து:
⇒ லஞ்ச வழக்கில் கவுதம் அதானி, மருமகன் சாகர் ஆகியோருக்கு அமெரிக்க எஸ்இசி அணைப்பானை அனுப்பியுள்ளது. 21 நாட்களுக்குள் பதில் அளிக்கா விட்டால், தீர்ப்பு வழங்கப்படும் என எச்சரிக்கை

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *