17 ஆயிரம் ‘வாட்ஸ் அப்’ கணக்குகள் முடக்கமாம்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, நவ.24- இணையவழிக் குற்றங் களில் ஈடுபட்ட, 17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்கு களை, ஒன்றிய அரசு முடக் கியுள்ளது.
இந்த கணக்குகள் பல் வேறு நாடுகளில் இருந்து செயல்பட்டு இந்தியாவில் சைபர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. டிஜிட்டல் மோசடிகளைத் தடுக்கும் வகையில், உள்துறை அமைச்சகம் தீர்க்கமான நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து உள் துறை அமைச்சகம் வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ள தாவது:
சைபர் கிரிமினல் நட வடிக்கைகள், பெரும் பாலும் கம்போடியா, மியான்மர், லாவோஸ் மற்றும் தாய் லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்த whatsapp கணக்குகள் மூலம் மேற்கொள்ளப்படுவது தெரியவந்துள்ளது.

இணைய ஆன்லைன் தளங்கள் மூலம் பாதிக்கப் பட்டவர்கள் அளித்த தொடர் புகார்களின் அடிப்படையில் நடத்தப் பட்ட விசாரணையில், பல்வேறு இணைய வழி (ஆன்லைன்) நிதி மோசடிகளில் ஈடுபட்ட மோசடியாளர்களால் இந்த கணக்குகள் பயன் படுத்தப்பட்டன. இது டிஜிட்டல் மோசடிகளின் ஆபத்தான அதிகரிப்பை எடுத்துக்காட்டுகிறது. சைபர் கிரைம் ஒருங் கிணைப்பு மய்யம் புகார் களை மதிப்பாய்வு செய்து, சந்தேகத் திற்கிட மான கணக்குகளை அடையாளம் கண்டு, இந்த எண்களைத் தடுக்க வாட்ஸ் அப்.,க்கு அறிவுறுத்தியது.

பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுவதற்காக, சட்ட அமலாக்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து ‘டிஜிட்டல் கைது’ மோசடி நடைபெறுகிறது. இந்த மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் ஒன்றிய புலனாய்வுப் பிரிவு, வருமான வரி அதிகாரிகள் அல்லது சுங்க அதிகாரிகளின் முகவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் மிரட்டல் தந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். சட்டவிரோத நட வடிக்கைகளில் பாதிக் கப்பட்டவர்கள் மீது பொய்யான குற்றச் சாட்டுகளை சுமத்துகி றார்கள். மேலும் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க பெரும் தொகையைக் கேட்டு தொல்லை கொடுப்பார்கள்.

இதுபோன்ற மோசடி நடவடிக்கைகள் மூலம் மோசடி செய்பவர்கள் ஒவ்வொரு நாளும் சுமார் 6 கோடி ரூபாய் திருடுவதாக சைபர் பிரிவின் ஆதாரங்கள் வெளிப்படுத்துகின்றன. 2024ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில், மொத்தமாக பறிக்கப்பட்ட தொகை வியக்கத்தக்க வகையில் ரூ.2,140 கோடியை எட்டியது. அக்டோபர் மாதத்திற்குள் டிஜிட்டல் கைது மோசடிகள் தொடர்பான 92,334 வழக்குகளை சைபர் பிரிவு கண்டிபிடித்துள்ளது. இவ் வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *