இது இந்தியாவில் தான் நடைபெறும் (ரீடர்ஸ் டைஜஸ்ட் வழங்கும் நகைப்புக்குரிய செய்தி)

1 Min Read

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பர்கத்துல்லாப் பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. அதில் ஆளுநர் மங்குபாய் சி. பட்டேல், மாநில முதலமைச்சர் மோகன் யாதவ், உயர் கல்வி அமைச்சர் கிந்தர் சிங் பர்மா ஆகியோர் பங்கேற்றனர். இதில், பட்டமளிப்பு உரையை, உயர்கல்வித்துறை அமைச்சர் நிகழ்த்தினார். அவர்தம் உரையில் கூறிய செய்திகளாவன:
இந்தியாவின் பெருமைமிக்க கப்பல்கள் அட்லாண்டிக் கடலைக் கடந்து சென்றுள்ளன. நமது முன்னோர்கள் கொலம்பசை தோற்கடிக்கும் வகையில் காரிய மாற்றியுள்ளனர்.

சீனாவின் பீஜிங் நகரம், இந்தியக் கட்டடக்கலை நிபுணர்களின் உதவியால் வடிவமைக் கப்பட்டது. அவர்கள் ராமர் சிலைகளை அமைத்தனர். ரிக் வேதத்தை எழுதியவர்கள், பூமி, சூரியனைச் சுற்றி வருகிறது என்பதை முன் கூட்டியே சொல்லி உள்ளனர்.
இப்படிக் கூறும் ஒரு மாநிலத்தின் உயர்கல்வித்துறை அமைச்சரின் ‘வரலாற்று செய்தி’ யின் தரத்தின் மூலம் அம்மாநிலக் கல்வித் துறையின் முன்னேற்றப் பாதையை அறியலாம்.

– மு.வி. சோமசுந்தரம், கோயம்புத்தூர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *