மணிப்பூரில் அமைதியைக் காக்க மேலும் ஆயுதப்படைகள் தேவை

1 Min Read

இம்பால், நவ.23 மணிப்பூரில் அமைதியைக் காக்க அதிகளவிலான மத்திய காவல் ஆயுதப் படைகள் தேவை என்று மாநில பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநில பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் கூறுகையில், “22.11.2024 அன்று நாங்கள் பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டத்தை நடத்தினோம், இந்தக் கூட்டத்தில், அனைத்து மாவட்டங்கள் மற்றும் இம்பால் நகரின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தோம். இந்தச் சந்திப்பின் போது, ராணுவத்தினர், காவல்துறையினர், ஒன்றிய காவல் படையினர், எல்லைக்காவல் படையினர், இந்திய – திபெத் எல்லைக் காவல்படை அதிகாரிகள் உடனிருந்தனர். எந்த பிரச்சினைகள் வந்தாலும், நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். கடந்த ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை இன வன் முறையில் 258 பேர் கொல்லப்பட்டுள்ளனர்’’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *